உதகை, ஜன.12- உதகையில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி டெலிகிராம் செயலி மூலம் லிங்க் அனுப்பி வாலிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்ற னர். நீலகிரி மாவட்டம், உதகை யைச் சேர்ந்த 25 வயது மதிக்கத் தக்க வாலிபர் ஒருவர் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் வசித்து வரு கிறார். இவர் பணி நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் சமூக வலை தளத்தை அதிகளவில் பயன்ப டுத்தி வந்துள்ளார். மேலும், சமூக வலைதளத்தில் வரும் தகவல்கள் மூலம் முதலீடு செய்து லாபம் சம் பாதிப்பது எப்படி? என்பது குறித்து தகவல்களையும் பார்த்து வந்துள் ளார். கடந்த சில நாட்களுக்கு முன் னர் டெலிகிராம் செயலி மூலம் இவருக்கு ஒரு லிங்க் அனுப்பப்பட் டது. அதில், அடையாளயம் தெரி யாத நபர்கள், முதலீடு செய்யும் பணம் இரட்டிப்பு செய்து அவ ருக்கு தரப்படும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம் பிய அந்த வாலிபர் வங்கி கணக்கு மூலம் அடையாளம் தெரியாத நபர் களின் வங்கி கணக்கிற்கு ரூ.1 லட் சத்து 98 ஆயிரத்து 484 தொகையை அனுப்பியுள்ளார்.
ஆனால், பணம் அனுப்பிய பின் னர் ஒரு வார காலமாக அவருக்கு எந்தவித பதிலும் வரவில்லை. இவர் குறிப்பிட்ட செல்போன் மற்றும் இ-மெயில் முகவரி மூலம் அவர் களை தொடர்பு கொள்ள முயற்சித் தும் தொடர்பு கொள்ள முடிய வில்லை. இதனால் தான் ஏமாற்றப் பட்டது அறிந்த அந்த வாலிபர் இது குறித்து உதகை குற்றப்புல னாய்பு பிரிவு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். மேலும், பணம் மாற்றப் பட்ட வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை முடக்கி வைத்துள்ள னர். இதுகுறித்து குற்றப்புலனாய்பு பிரிவு காவல் ஆய்வாளர் பிலிப் கூறுகையில், ஆரம்ப காலங்களில் செல்போனுக்கு ஓடிபி (One Time Password - OTP) எனப்படும் ஒரு முறை அனுப்பப்படும் கடவுச் சொல் அனுப்பி அதன் மூலம் மோசடி செய்து வந்தனர். தற்போது பொது மக்கள் ஓடிபி (OTP) விசயத்தில் கவனமடைந்து விட்டதால் மாற்று வழிகளை கையாண்டு வருகின்ற னர். குறிப்பாக, டெலிகிராம் செய லியை பயன்படுத்துபவர்களை மோசடி ஆசாமிகள் தேர்ந்தெ டுத்துள்ளனர். ஏனென்றால் மற்ற செயல்பாடுகள் மூலம் ஏமாற்றி னால்,
அந்த செயலி அல்லது செல் போன் எண் மூலம் மோசடி ஆசாமி களை எளிதில் பிடித்து விடலாம். ஆனால், டெலிகிராம் செயலியை பயன்படுத்துபவர்களின் தகவல் களை டெலிகிராம் நிர்வாகம் தருவ தில்லை. இதை தெரிந்து கொண்ட மோசடி செய்பவர்கள் இந்த வழி முறைகளை தற்போது அதிகம் பின்பற்றுவதால் பொதுமக்கள் கவ னமாக இருக்க வேண்டும். இதற்கிடையே இந்த ஆண்டு தொடங்கி 10 நாட்களுக்குள் குற்றப் புலனாய்பு பிரிவு காவல் நிலையத் தில் 10 புகார்கள் பதிவு செய்யப்பட் டுள்ளது. அதாவது தொழில் முத லீடு செய்வதாக 2 புகார்கள், பான் கார்டை அப்டேட் செய்து தருவதாக லிங்க் அனுப்பி 3 புகார்கள் ஆகி யவை பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.