districts

img

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் வியாபாரம் பாதிப்பு

திருப்பூர், அக்.18- தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரமே உள்ள நிலையில்  திருப்பூர் மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் வியாபாரத் தில் சற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர்  தொழில் நகரமாக இருப்பதால், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநில மக்கள் வசிக்கி றார்கள். தீபாவளிக்கு முந்தைய இரண்டு வாரங்கள் கடை வீதிகளில் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் கூட்டம் நிரம்பி  வழியும். இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரமே  உள்ள நிலையில் திருப்பூர் கடைவீதிகளில் கூட்டம் அலை மோதி வருகிறது. திருப்பூர் பழைய பேருந்து நிலையம்,  புதிய பேருந்து நிலையம், குமரன் ரோடு, புதுமார்க்கெட் வீதி,  முனிசிபல் வீதி, பி.என். ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்து வதற்காக போலீசார் தடுப்பு  அரண்களை அமைத்து உள்ளார்கள்.ஞாயிற்றுக்கிழமை  விடுமுறை நாள் என்பதால் பெரும்பாலானவர்கள் தங்கள்  குடும்பத்தினருடன் புத்தாடைகள் மற்றும் வீட்டு உபயோகப்  பொருள்கள், நகைகள் வாங்குவதற்காகவும் குவிந்தனர். இத னால் குமரன் சாலை, புதுமார்கெட் வீதி, காமராஜா் சாலை உள் ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் அவ்வப்போது மழை பெய்து வருவது வியாபாரத் தில் சற்று பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலான  இடங்களில் சாரல் மழை பெய்தது. இதனால் புத்தாடை கள், பரிசுப் பொருள்கள் வாங்கக் வந்தவர்களில் ஒரு பகுதி யினர் கிளம்பிச் சென்றதால் வியாபாரம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.  மேலும் பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச் சார்ந்த  நிறுவனங்களில் இன்னும் ஓரிரு நாள்களில் போனஸ் பட்டு வாடா செய்ய வாய்ப்பு உள்ளதால் வரும் நாட்களில்  புத்தாடைகள், பட்டாசுகள் அதிக அளவில் விற்பனை செய்யப் பட வாய்ப்பு உள்ளது.