districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு துவக்கம்

வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு துவக்கம் நாமக்கல், மார்ச் 24- ஈரோடு மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவு செய் யும் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் நடை பெற்றது. ஈரோடு மக்களவை தொகுதிக்குட்பட்ட குமாரபாளை யம் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு செய்யும் அலுவ லர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் ஞாயிறன்று,  குமாரபாளையத்தில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் 279 வாக்குப்பதிவு மையங் களில் பணியாற்றும் 780 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு தேர்தல் நடத்தும் அலு வலரும், வட்டாட்சியருமான சண்முகவேலு தலைமை வகித் தார். இக்கூட்டத்தில், செயல் விளக்கங்கள், காணொளி காட்சி  வாயிலான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

வனப்பகுதிக்கு தீ வைப்பு

வனப்பகுதிக்கு தீ வைப்பு கோவை, மார்ச் 24- வால்பாறை பூங்கா பகுதியில் உள்ள சிறு வனப்பகு திக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்த சம்ப வத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. கோவை மாவட்டம், வால்பாறை - பொள்ளாச்சி மெயின் சாலை, காமராஜ் நகரில் பொதுப்பணித்துறை அலுவலகம் மற்றும் குடியிருப்பு உள்ளது. இப்பகுதியிலுள்ள சிறு  வனப்பகுதிக்கு சனியன்று மாலை அடையாளம் தெரி யாத நபர்கள் தீ வைத்து சென்றுள்ளனர். இதனால் அருகில்  உள்ள பூங்கா பகுதிக்கும் தீ பரவியது. இதுகுறித்து தகவ லறிந்து வந்த வால்பாறை தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்த னர். இதனால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், அப்பகுதியில் அபாய மரங்களின் உய ரத்தை வெட்டிக்குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வருடத்திற்கு ஒருமுறை ரத்ததான முகாம்

நாமக்கல், மார்ச் 24- வருடத்திற்கு ஒருமுறை ரத்ததான முகாம்  நடத்துவதென பள்ளிபாளையம் கோன் நூல்  வியாபாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் கோன் நூல் வியாபாரிகள் சங்க பொதுக்குழு  கூட்டமானது ஆவரங்காடு தனியார் மண்ட பத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங் கத்தின் தலைவர் தங்கராஜ் தலைமை வகித் தார். துணைத்தலைவர் ஜானகிராமன், பொரு ளாளர் ஆர்.பி.சக்திவேல், செயலாளர் சம்பு,  துணைச்செயலாளர் பச்சியப்பன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் 2023- 2024 ஆம் ஆண்டுக்கான வேலை அறிக்கை, வரவு செலவு சமர்ப்பிக்கப்பட்டது. மேலும், சங்கத்தின் சார்பில் வருடத்திற்கு ஒருமுறை ரத்ததான முகாம் நடத்துவது, சங்கத்தை சேர்ந்த உறுப்பினரிடம் வேலை செய்யும் கோன் நூல் பிரிக்கும் வேலையாட்கள் வெளி இடங்களுக்கு சென்று கோன் பிரிப் பதை தவிர்க்க வேண்டும். தேர்தல் நடத்தை  விதிகள் அமலில் உள்ளதால், கோன் மூட் டைகளை வெளியிடங்களுக்கு கொண்டு  செல்லும் பொழுது உரிய ஆவணங்களுடன் கொண்டு செல்ல வேண்டும் உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வறண்டு காணப்படும் நீரோடைகள்: வனவிலங்குகள் இடம்பெயர்ச்சி

வறண்டு காணப்படும் நீரோடைகள்: வனவிலங்குகள் இடம்பெயர்ச்சி கோவை, மார்ச் 24- வனப்பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால், அங் குள்ள நீரோடைகளில் தண்ணீரின்றி வறண்டு காணப்ப டுவதால், விலங்குகள் இடம்பெயர்வதை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்தாண்டில் பருவமழை சில மாதங் கள் பெய்தது. அவ்வப்போது பெய்த பருவமழையால் வனப் பகுதியில் உள்ள அருவி, நீரோடைகளில் தண்ணீர் வரத்து  அதிகளவு இருந்தது. இதனால் அந்நேரத்தில் வனப்பகுதி யில் ஆங்காங்கே புதிதாக சிற்றருவிகள் உருவானது. இதில்  கவியருவியிலும், அருகே உள்ள நவமலை நீரோடை யிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. ஆனால், அங்கு  தண்ணீர் கொட்டுவது கடந்த ஜனவரி மாதம் வரையிலே  ஓரளவு இருந்தது. அதன்பின் மழை இல்லாததால், கவியருவி மற்றும் நீரோடைகளில் குறைந்த அளவே தண்ணீர் வரத்து இருந்தது. பின்னர் கடந்த பிப்ரவரி துவக்கத் திலிருந்து கவியருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை  விதிக்கப்பட்டது. நவமலை உள்ளிட்ட நீரோடையில் தண்ணீர்  வரத்து மிகவும் குறைவாக இருந்ததால் பெரும்பகுதி வெறும்  பாறையானது. பொள்ளாச்சி வனச்சரகத்தில் எப்போதும் தண்ணீர் வந்து கொண்டிருக்கும், ஆழியார் அருகே உள்ள  நவமலை நீரோடையில் தற்போது தண்ணீர் வரத்து முற்றிலு மாக நின்று போனது. இதனால் அப்பகுதி வறண்ட இடமாக  காணப்படுகிறது. வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் இல்லா மல் உள்ளதால், அடர்ந்த வனத்திலிருந்து விலங்குகள் பல,  நீர்நிலைகளை தேடி வருவது தொடர் கதையாக உள்ளது. இருப்பினும், அடர்ந்த வனத்திலிருந்து இடம்பெயரும் விலங் குகளை கண்காணிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடு வதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நீர்மட்டம் குறைந்து காணப்படும் பைக்காரா அணை

உதகை, மார்ச் 24- மின் உற்பத்திக்காக நாள்தோறும் தண்ணீர் எடுத்து வரும் நிலையில், பைக் காரா அணையின் நீர்மட்டம் மிகவும் குறைந்து காணப்படுகிறது. நீலகிரி மாவட்டம், உதகை அருகே  இயற்கை எழில் சூழ்ந்த பைக்காரா அணையில் படகு சவாரி செய்வதில் சுற் றுலாப் பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த அணை யில் தண்ணீரை கொண்டு பைக்காரா நுண்புணல் மின் நிலையம், மாயார்,  மரவக்கண்டி ஆகிய நீர் மின் நிலையங் களின் மின் உற்பத்தி செய்யப்பட்டு வரு கிறது. பைக்காரா அணையில் இருந்து  நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி  செய்வதற்காக தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், நாள்தோறும் நீரின் அளவு குறைந்துக் கொண்டே செல்கிறது. தற்போது பல அடிக்கு  கீழே தண்ணீரின் அளவு சென்றுள் ளது. 100 அடி உள்ள இந்த அணையில்  தற்போது 50 அடி தண்ணீர் மட்டுமே  உள்ளது. இதனால் படகு நிறுத்துமி டமும் தாழ்வான பகுதிக்கு சென்று விட்டது. தற்போது, பைக்காரா அணை யில் படகு சவாரி செய்ய வேண்டுமா யின் சுமார் 100 படிகள் கீழே இறங்கி  சென்ற பின்னரே படகு நிறுத்தும் இடத்தை அடைய முடியும். இதனால்  பலர்  படியிறங்கி செல்ல முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது. எனவே, இங்கு செல் லும் சுற்றுலாப் பயணிகள் படகு  சவாரி செய்ய கடும் அவதிக்குள்ளா கியுள்ளனர். தொடர்ந்து மின் உற்பத் திக்காக அணையில் இருந்து தண் ணீர் எடுத்து வரும் நிலையில் கோடை யில் அணையின் நீர்மட்டம் மிகவும் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நீர், மோர் பந்தல் திறப்பு

திருப்பூர், மார்ச் 24- திருப்பூர், பெருமாநல் லூரில் கொண்டத்துக் காளி யம்மன் குண்டம் திருவி ழாவை முன்னிட்டு மார்க் சிஸ்ட் கட்சி கிளைகள் சார் பில் நீர், மோர் பந்தல் திறந்து  வைக்கப்பட்டது. இந்நிகழ் வில் கட்சியின் பெருமாநல் லூர் கிளைச் செயலாளர் ஜி.சண்முகம் தலைமையில்,  ஈட்டிவீரம்பாளையம் கிளைச் செயலாளர் சுப்பிரம ணியம் வரவேற்றார். மாவட் டக்குழு உறுப்பினர் ஆ.சிகா மணி உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.

ஆளில்லா பார்சலை வாங்கக்கூடாது பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு அறிவுரை

சேலம், மார்ச் 24- மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலா னதைத் தொடர்ந்து, பேருந்துகளில் ஓட்டுநர்கள், நடத்துனர் கள் ஆளில்லா பார்சலை வாங்கக்கூடாது என போக்குவ ரத்துத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சேலம் மக்களவைத் தொகுதி தேர்தலை முன்னிட்டு, பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்கா ணித்து வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்  பொருட்கள் ஏதாவது கொண்டு செல்லப்படுகிறதா? என  24 மணி நேரமும் பறக்கும் படையினர் சோதனை நடத்தி  வருகின்றனர். வழக்கமாக, பேருந்துகளில் ஆளில்லாத பார் சல்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு, விநியோகம் செய் யப்பட்டு வந்தது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், அதுபோன்ற பார்சல்களை யாரும் வாங்க வேண்டாம் என போக்குவரத்துத்துறை அதிகாரி கள் அறிவுறுத்தியுள்ளனர். பார்சலில் என்ன இருக்கிறது என  தெரியாமல் வாங்கும்பட்சத்தில் அதில், பணம், பரிசுப்  பொருட்கள் ஏதாவது இருந்தால் சிக்கலாகும் என்பதால், இந்த  நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரி வித்தனர். மேலும், ஆளில்லா பார்சல்கள் கொண்டு செல்லப் படுகிறதா? என்பதை கண்காணிக்கவும் அதிகாரிகள் முடிவு  செய்துள்ளனர்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு வைப்பு

உடுமலை, மடத்துகுளம் ஆகிய சட்ட மன்ற தொகுதிகளில், மக்களவைத் தேர்த லில் பயன்படுத்தக்கூடிய வாக்குப்பதிவு  இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள் ளன. பொள்ளாச்சி மக்களவை தொகுதியில்  உடுமலை, மடத்துக்குளம், பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, தொண்டா முத்தூர் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதி கள் உள்ளன. நகர் பகுதியில் 821, கிராமப்ப குதியில் 880 என மொத்தம் 1,701 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் உடுமலைப் பேட்டை சட்டமன்ற தொகுதியில் 127  வாக்குப்பதிவு மையங்களில் 295 வாக்குச் சாவடிகளும், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் 117 வாக்குப்பதிவு மையங்க ளில் 287 ஓட்டுச்சாவடிகளும் அமைக்கப் பட்டுள்ளன. இந்நிலையில், உடுமலை சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு தேவையான 355 பேலட் யூனிட் 355 மின் னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 385  விவி பேட் இயந்திரங்கள் கொண்டுவ ரப்பட்டு, உடுமலை அரசு கலைக் கல்லூ ரியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதே போல, மடத்துக்குளம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் மடத்துக்குளம் அரசு மேனிலைப் பள்ளியிலும் வைக்கப்பட்டுள்ளது. உதவி  தேர்தல் நடத்தும் அலுவலர் ஜஸ்வந்த் கண்ணன் மற்றும் வட்டாச்சியர் சந்தரம்,  அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலை யில் இருப்பு அறைக்கு சீல் வைத்தனர். துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் கண் காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற னர்.