நாமக்கல், ஏப்.24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்ட அறிவிப்பால் 24 மணி நேரத் தில் இரண்டு வருடங்களாக ஆக்கிர மிப்பில் இருந்த இடம் மீட்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், எலச்சி பாளையம் ஒன்றியம், இலுப்புலி கிரா மம் சூரிப்பட்டி பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின் றனர். சூரிப்பட்டி பகுதியில் சர்வே எண் 566/7ல் 32 அடி அகலத்திற்கு சாலை யானது ஊராட்சி மூலம் இப்பகுதி மக் களுக்கு இருந்து வந்தது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மிக வும் வசதி படைத்த ஒருவர் இப்பொதுப் பாதையில் குடிசை அமைத்து ஆக்கிர மிப்பு செய்து வந்தார். இதனால், அப் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாத அளவிற்கு பெரும் சிரமம் ஏற் பட்டு வந்தது. இதுகுறித்து, இப்பகுதி மக்கள் வரு வாய் துறை, உள்ளாட்சித்துறை உள் ளிட்ட பல்வேறு துறைகளுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு எவ் வித நடவடிக்கையும் எடுக்காமல் அரசு அதிகாரிகள் கிடப்பில் போட்டுள்ள னர். இதனால், இப்பகுதி மக்கள் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அணுகி னர். அப்பகுதி மக்கள் மூலம் காத்தி ருக்கும் போராட்டம் ஏப்.22 ஆம் தேதி யன்று எலச்சிபாளையம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு காத்தி ருக்கும் போராட்டம் நடத்துவது என பிளக்ஸ் தட்டி வைக்கப்பட்டது. இதையடுத்து 24 மணி நேரத்தில் வரு வாய் ஆய்வாளர் லட்சுமணன் தலை மையில், கிராம நிர்வாக அலுவலர் சசி குமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் முத்துசாமி உள்ளிட்டோர் நேரில் சென்று அளவீடு செய்து 32 அடி அகல பொதுப் பாதையை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு அப்பகுதி மக்களின் பயன்பாட் டிற்கு விடப்பட்டது. ஆகவே, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்ட அறி விப்பு கோரிக்கை நிறைவேறி இருப்ப தால் அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சிக்கு நன்றிகளைத் தெரி வித்துள்ளனர்.