கோவை, ஆக 29- தொழில் தொடங்குவதற்கான கடன் வழங்குவதை வங்கிகள் தட் டிக் கழிப்பதாக புகார் தெரிவித் தால், முதல்வர் தனி பிரிவிலிருந்து இயங்கும் துறை உடனடி நடவ டிக்கை எடுக்கும் என சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் எச்சரித்தார். புதிதாக தொழில் தொடங்க விண்ணப்பித்தவர்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி வியாழனன்று கோவை கொடிசியா அரங்கத்தில் நடைபெற்றது. இதில், சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச் சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று, 46 தொழில் முனைவோர்களுக்கு, ரூ.30 கோடியே 30 லட்சம் தொழில் கடன்களை வழங்கினார். இதுகுறித்து அமைச்சர் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளிக்கை யில், கடந்த ஜனவரி மாதம் முதல் வர் தலைமையில் உலக முதலீட்டா ளர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் எம்எஸ்எம்இ துறையில், 5068 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. கடந்த எட்டு மாதங்களில் இதுவரை 1645 நிறுவனங்கள் மட்டுமே உற்பத் தியை தொடங்கி இருக்கிறது. மீதம் இருக்கக்கூடிய தொழில் தொடங் காத வங்கி கடன் பெற்ற தொழில் முனைவோர்களை இங்கு அழைத்து இருப்பதாக கூறினார். அவர்களின் பிரச்சனைகள் கேட்ட றிந்து, அதற்கான தீர்வு ஏற்படு வதற்காக அனைத்து துறை அதிகா ரிகளையும் இங்கே அழைக்கப் பட்டு ஆலோசனை மேற்கொள்ளப் படுகிறது. தொழில் தொடங்காததற் கான காரணம், நடைமுறை சிக்கல் களை களைந்து, அவர்கள் விரை வில் தொழில் தொடங்க ஆவண செய்யப்படும். கடந்த மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில், இதுவரை 2615 கோடியே 30 லட்சம் வங்கிக் கடன், தொழில் தொடங்குவதற்காக வழங்கப்பட்டுள்ளது. 30 ஆயிரத்து 324 தொழில் முனைவோர்களை கடந்த மூன்று ஆண்டு காலத்தில் அரசு உருவாக்கி, 3 லட்சம் நபர்க ளுக்கு வேலைவாய்ப்பு கொடுத் துள்ளது. மேலும், இக்காலத்தில் தமிழக முழுவதும் 16 தொழிற் பேட்டைகள், 415 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள் ளது. புதிதாக 115.6 கோடி மதிப்பில் பத்து தொழிற்பேட்டைகள் அமைப்பதற்கான பணிகள் நடை பெற்று வருகிறது. தமிழக முழு வதும் சமச்சீரான தொழிற் வளர்ச்சி ஏற்படுத்தி, அதிக தொழில் வளர்ச் சியை உருவாக்கி, ஆயிரக்கணக் கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும். இந்த இலக்கில் தமிழக அரசு செயல் பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், மத்திய அரசின் உதய் திட்டத்தில் கையெழுத்து போட்ட தால் தான், மின் கட்டணம் இந்த அள வுக்கு உயர்த்தப்பட்டதற்கு கார ணம். ஒரு சிலருக்கு தொழில் தொடங்க மாவட்ட தொழில் மையத் தில் கடன் பெற உரிய ஆவணங் கள் சமர்ப்பித்தாலும் கடன் கொடுக்க வங்கிகள் மறுப்பது குறித்த கேள்விக்கு, மாவட்ட வாரியாக ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகள் குறைகளை கேட்பதற் காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தொழில் தொடங்குவற்கான கடன் வழங்குவதை வங்கிகள் தட்டிக் கழிப்பதாக புகார் தெரி வித்தால், முதல்வர் தனிபிரிவி லிருந்து இயங்கும் துறை உடனடி நடவடிக்கை எடுக்கும் என்றார். இக்கூட்டத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் எல்.நிர்மல்ராஜ், கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் முனைவர். கணபதி.ப.ராஜ்குமார், கோவை மாநகராட்சி மேயர் இரா.ரங்கநா யகி, தொழில் வணிகத்துறை கூடு தல் ஆணையர் சிவ.சௌந்திர வள்ளி உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.