districts

பிஎம்பி பஞ்சாலையின் சட்டவிரோத கதவடைப்பு

தருமபுரி ஆக-12, சட்டவிரோத கதவடைப்பை கண் டித்து பிஎம்பி பஞ்சாலை தொழிலா ளர்கள் குடும்பத்துடன் திங்களன்று தரு மபுரி மாவட்ட ஆட்சியர் அலுலகம் முன்பு சிஐடியு தலைமையில் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம் நல்லாம்பள்ளி யில் பிஎம்பி என்கிற தனியார் பஞ்சாலை இயங்கி வருகிறது. பஞ்சாலை நிர்வா கம்,ஊழியர் விரோதப் போக்குடன் செயல்பட்டு வருகிறது. நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கை தொழிலா ளர்கள் கேள்வி எழுப்பினர். இந்நிலை யில், தொழிலாளர்களை ஏமாற்றி ஆலையை மூடும் நடவடிக்கை மேற் கொண்டது. இதனை எதிர்த்து சிஐடியு தலைமையில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன்ஒருபகுதியாக, பிஎம்பி பஞ் சாலையை நிர்வாகம் உடனடியாக திறந்து தொழிலாளர்களுக்கு வேலை வழங்கவேண்டும். நிலுவை ஊதி யத்தை தொழிலாளர்களுக்கு உடனே வழங்க வேண்டும். தினக்கூலி பெண் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள 8 வார சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். 2015 முதல் இன்று வரை தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த பிஎஃப் மற்றும் இஎஸ்ஐ தொகையை உடனே தொழிலாளர் கணக்கில் வரவு வைக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பஞ்சாலை தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கண்ணதாசன் தலைமை ஏற்றார். இதில், சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன், மாவட்டச் செயலாளர் பி.ஜீவா, சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் தீ.லெனின் மகேந்திரன் ,சி.அங்கம்மாள் ,பி.ஆறு முகம் வி.ஜெயராமன், கே.வேலு, கே.கருணாநிதி உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.