அவிநாசி ஆக.26 அவிநாசி அருகே வள்ளிபுரம் ஊராட்சி யில், அரசு பள்ளியில் காலை உணவு திட் டத்தை, பட்டியலினத்தை சேர்ந்த பெண் சமைத் தாக கூறி பெற்றோர்கள் சிலர் புறக்கணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் நேரிடையாக இப்பிரச்ச னையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. தமிழக அரசால் காலை சிற்றுண்டி திட் டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப் படுத்தியுள்ளார். திருப்பூர் மாவட்டத்திலும் 1081 பள்ளிகளில் 75 ஆயிரத்து 482 மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள். இதன்படி திருப்பூர் அருகே வள்ளிபுரம் ஊராட்சி, காளிங் கராயன்பாளையத்தில் உள்ள அரசு தொடக் கப்பள்ளியிலும் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரு கிறார்கள். இங்கு சமையலராக ஆதிதிராவி டர் காலனியைச் சேர்ந்த தீபா என்பவர் காலை யில் சமைத்து பள்ளி மாணவ, மாணவிக ளுக்கு பரிமாறியுள்ளார். இதில் உணவு சமைத்த தீபா பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் ஒரு தரப்பு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், காலை உணவு புறக்கணித்துள்ளனர். இதனால் குழ தைகளுக்கு மாற்று சான்றிதழை தாருங்கள் எனவும் கேட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வேலுச்சாமி, காளிங்க ராயன்பாளையம் பள்ளியில் ஆய்வு மேற் கொண்டார். அங்கு எந்த பிரச்சனையும் இல்லை. முதல் நாளில் உணவு சாப்பிடு வது தொடர்பாக பிரச்சினை எழுப்பியவர்கள் பள்ளிக்கு சம்பந்தமில்லாத வெளிநபர்கள் சிலர். தற்போது பள்ளியில் எந்த பிரச்சனை யும் இல்லை. காலை உணவுத்திட்டம் சிறப் பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது, என்றார். இதற்கிடையே பள்ளியில் தீபா தான் சமையல் செய்துள்ளார். மாணவ, மாணவிகள் அதனை சாப்பிட்டுள்ளனர். அங்கு வேறு எந்த பிரச்ச னையும் நடைபெறவில்லை. மாவட்ட நிர்வா கம் சார்பில் உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன் னணி திருப்பூர் மாவட்டம் தலைவர் செய லாளர் விடுத்துள்ள அறிக்கையில்:
வள்ளி புரம் ஊராட்சி, காளிங்கராயன் பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் பட் டியல் சமூகத்தைச் சேர்ந்த தீபா, காலை உணவு செய்தபோது, பிற்படுத்தப்பட்ட சமூகத் தைச் சேர்ந்த சிலர், பட்டியல் சாதிப்பெண் சமைத்தால், எங்கள் குழந்தைகள் உண்ண மாட்டார்கள் என்று தலைமை ஆசிரியரிடம் கூறி, தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளனர். இதற்கு முன்பு, அவிநாசி அருகே பள்ளியில் சத்துணவு சமைத்த பாப் பாள் மீது, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தீண்டாமைக் கொடுமை இழைத்த வழக்கு, தற்போது விசாரணைக்கு வந்துள்ள நாளில் அதேபோன்ற பிரச்சனை மீண்டும் தலை தூக்குவது கடும் கண்டனத்துக்குரியது. எனவே, இப்பிரச்சனையில், மாவட்ட ஆட் சியர் நேரடியாகத் தலையிட்டு, அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். காவல் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு மூலம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் வசிக்கும் பகுதிகளில் விழிப்புணர்வுக் கூட்டங் கள் நடத்த வேண்டும். காலை உணவுத் திட் டத்தில் சமையலர் தீபா, தொடர்ந்து பணி செய்வதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். இதுபோன்ற தமிழக அரசின் நல்ல திட்டங்களுக்கு ஊறுவிளைவிக்க முயற்சிக் கும் சில சமூக விரோதிகள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருப்பூர் மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது.