districts

img

கழுத்தை நெறிக்கும் கடன் செயலிகள்

அவசரத்திற்கு கடன் தருவதாக பொதுமக்களிடம் விளம்பரம் செய்யும் சில ஆன்லைன் கடன் செயலிகள், தகவல்களை திருடி, பணம் பறிக்கும் சம்பவம் அரங்கேறி வருவது அதிகரித்து வருகிறது. எச்சரிக்கையோடு இல்லாவிட்டால் இருப்பதும் பறிபோகும் ஆபத்தை அனுபவிக்க வேண்டியுள்ளது. இணையதளம் மூலமாக எந்த அளவுக்கு நன்மை இருக்கி றதோ அதே அளவில், அதைவிட அதிகமாக தீமைகளும் நம்மை சூழ்ந்துள்ளன. பெரு நகரங்களில் வாழும் மக்கள் இணையம் உபயோகிக்காதவர்களே மிககுறைவு.  வேலை  நிமித்தமாகவும், பொழுதுபோககிற்காவும், பொருட்கள் வாங்கவும், விற்பனை செய்யவும் இன்று நாம் இணையத்தை உபயோகிக்கும் அதே நேரத்தில் நமது தகவல்களைத் திருடி அதன் மூலமாக ஆதாயம் ஈட்டப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் சைபர் குற்றவாளிகள். இணையத்தை நாம் உபயோகிக்கும் போதும், நமது செல்போனில் செயலிகளை பதிவிறக்கம் செய்யும் போதும், இணையம் மூலம் வங்கி பரிவர்த்தனைகள் செய்யும் போதும் நம் கண்களை கட்டி தகவல்களையும், பணத்தையும் கைப்பற் றிவிடுகின்றனர் தொழில் நுட்ப கொள்ளையர்கள். வெளி நாட்டில் வேலை என்று கூறி பணத்தை ஆன்லை னில் வாங்கிவிட்டு ஏமாற்றுவது, போலி சமூக வலைதள கணக் குகளை தொடங்கி பணத்தை பறிப்பது, நமது ஏடிஎம் கார்டில் உள்ள தகவல்களை வாடிக்கையாளர் சேவை மையம் போல் கேட்டு நமது வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை கொள்ளை யடிப்பது என ஏராளமான மோசடிகள் நடைபெற்று வரு கிறது.  தற்போது புதிய முறையை கையாண்டு ஒருவரின் அவசர கதியை பயன்படுத்தி அவர்களுக்கு ஆசை வார்த்தை காட்டி மயக்கி, அச்சுறுத்தி பணம் பறிக்க தொடங்கி யுள்ளனர். 

லோன் ஆப்

இன்று பலரது செல்போன்களிலும் குறைந்த வட்டியில் கடன், 5 நிமிடத்தில் கடன் என்ற விளம்பரங்களும், அது  தொடர்பான குறுஞ்செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன கடன் வேண்டுமென்றால் குறிப்பிட்ட செயலியை பதிவிறக் கம் செய்ய தூண்டப்படுகிறது. இதில் பெரும்பாலான செய லிகள் போலியானவை என்கின்றனர் போலீசார். பொதுவாக ஒரு செயலியை நாம் நமது செல்போனில் பதிவிறக்கம் செய்யும் போது அது இயங்குவதற்கு தேவை யான அனுமதிகள் தேவைப்படும். உதாரணமாக ‘கூகுள் பே’ செயலி இயங்க நாம் செல்போனில் சேமித்து வைத்திருக்கும்  தொலைபேசி எண்களை காண்பதற்கான அனுமதியை அந்த  செயலி கேட்கும். நாம் அனுமதிக்காவிட்டால் அந்த செயலி யால் நமது தொடர்புகளை காண முடியாது. இதனிடையே இன்று உலவும் போலியான ‘கடன் செயலி’ களை நாம் பதிவிறக்கம் செய்யும் போது, நமது செல்போனில் உள்ள தொடர்புகள், கேலரி, லொகேஷன், மைக்ரோ போன் மற்றும் காமிரா உள்ளிட்ட அனைத்தையும் கையாள்வ தற்கான அனுமதியை கேட்கிறது. சிரமத்தில் இருக்கும் மக்கள் குறைவான வட்டியில் உடனடி கடன் கிடைக்கப் போகிறதே என்று நம்பி அத்தனை அனுமதிகளையும் அங்கீக ரித்து விடுகின்றனர். இதற்கு அடுத்தது தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. அவ்வாறு நாம் கொடுத்த அனுமதிகள் அனைத்தையு கையில் வைத்துக்கொண்டு நாம் நமது செல்போனில் சேமித் துவைத்த அனைத்து தரவுகளையும், அந்தரங்கங்களையும் சில நொடிகளில் திருடி வைத்துக் கொண்டு மிரட்டி பணம்  பறிக்க துவங்குகின்றனர் இந்த தொழில் நுட்ப கொள்ளை யர்கள்.

மிரட்டல்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த பெண் ஒருவர் இது போன்ற போலியான செயலியால் சிக்கி லட்சக் கணக்கில் பணத்தை இழந்துள்ளார். பெயர் வெளியிட விரும்பாத அந்த பெண் கூறியதாவது: அவசர தேவைக்காக கடன் தேவைப்பட்டது. அதனால் ப்ளே ஸ்டோரில் இருந்து லோன் செயலிகளைப் பதிவிறக்கம் செய்தேன். ரூ.50 ஆயிரம் கடன் வேண்டி விண்ணப்பித்து எனது வங்கிக்கணக்குகளை அந்த செயலியில் பதிவிட்டேன். கடன்  கேட்ட தொகை வரவில்லை, அடுத்த இரண்டு நாட்களிலேயே அவர்களிடம் இருந்து அழைப்பு தான் வந்தது. மாதத்தவணை வந்துவிட்டதாக கூறி பணம் கேட்டார்கள்.  பணமே வரவில்லை என்று கூறி மாதத்தவணை கட்ட மறுத்தேன். அதற்கு எனது செல்போனில் உள்ள புகைப்ப டங்களை அனைத்தையும் எடுத்துவிட்டதாகவும், அதனை ‘மார்பிங்’ செய்து நிர்வாணமாக்கி, எனது செல்போனில் பதிவு  செய்து வைத்திருக்கும் தொடர்பு எண்களுக்கு அனுப்பிவிடு வதாக மிரட்டினார்கள்.  அவர்கள் எனது புகைப்படங்களை கைப்பற்றியதற்கு ஆதாரமாக சில புகைப்படங்களையும் எனக்கு அனுப்பி னார்கள். இதனால் பயந்து போய் கடன் வாங்கி அவர்க ளுக்கு பணத்தை கொடுக்க துவங்கினேன். ஒருமுறை கொடுத் தால் விட்டுவிடுவார்கள் என்று நினைத்தேன்.  ஆனால், அவர்களது மிரட்டல் தொடர்ந்தது. இதுகு றித்து எனது குடும்பத்தாரிடம் தெரிவித்தேன். தொடர்ந்து சைபர் கிரைமில் புகார் அளித்தேன். ஆனால் இதுவரை மோசடி ஆசாமிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. எனது  பணமும் எனக்கு வந்து சேரவில்லை. இறுதியில் எனது செல்போனையும், செல்போன் எண்ணையும் மாற்றி விட்டேன் என்றார். 

இதுகுறித்து கோவை சைபர் கிரைம் காவல் அதிகாரியிடம் பேசுகையில், ஆன்லைன் மூலம் பணத்தை இழந்தவர்கள் தொடர்பாக புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இவர்கள் போன்ற  சைபர் கொள்ளையர்கள் பெரும்பாலும் வடமாநில கும்பலா கவே இருக்கின்றனர். இவர்கள் தங்கள் இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பவர்கள். பாதிக்கப்பட்டவர்கள் உடனடி யாக புகார் கொடுத்தால், சம்மந்தப்பட்ட வங்கிக் கணக்கு களை முடக்கி, பணத்தை மீட்டுக்கொடுத்து வருகிறோம். ஆனால், இந்த மிரட்டல் கும்பல்கள் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து யு.பி.ஐ மூலமாக பணம் பறிக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் நூதனமாக மக்கள் பணத்தை கொள்ளை யடிக்கின்றனர். புகாரை பதிவு செய்து, சம்மந்தப்பட்ட நபரை  தேடிச் செல்கையில் அவர்கள் இடத்தை மாற்றிவிடுகின்றனர். அவர்களது இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியாத வகையில் மென்பொருட்களை உருவாக்கி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விஷயத்தில் பொதுமக்கள்  கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்வதையும், நமது செல்போனில் உள்ள  அனைத்து அனுமதிகளையும் கொடுப்பதைத் தவிர்க்க  வேண்டும். மேலும், உடனே உங்களது செல்போனில் உள்ள தேவையற்ற செயலிகளை  நீக்கிவிடுங்கள். ஒரு செயலி எதற் கெல்லாம் அனுமதி கேட்கிறதோ அந்த அனுமதி கட்டா யம் தேவையா? என்பதை நன்கு அறிந்த பிறகே அனுமதி கொடுத்திடுங்கள் என்றார். சக மனிதனின் துயரத்தில் பங்கெடுத்து ஆறுதலாய் இருக்க வேண்டிய மனித மனம் இன்று அந்த துயரத்தையே அறிவியல் வளர்ச்சியின் துணை கொண்டு பணத்தை சுருட்டுகிறது. எச்சரிக்கை உணர்வோடு செயல்பட வேண்டிய தருணமிது.

-கே.எஸ்.எஸ்