districts

img

மின் கசிவு காரணமாக வீடு எரிந்து நாசம்

கோவை, ஏப்.27- பொள்ளாச்சி அடுத்த சிங்காநல்லூர் பெருமாள் கோவில் வீதியில் மின் கசிவு காரணமாக ஒரு  வீடு முற்றிலும் எரிந்து  சேதமானது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். பொள்ளாச்சி அடுத்த சிங்காநல்லூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரபு. இவர் தனது தாய்  மகுடீஸ்வரியுடன் வசித்து வருகிறார். இரு வரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் வியாழனன்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் சுமார் 12.30 மணி அளவில் பிரபுவின் வீடு தீ பற்றி எரிவதை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்க்கு வந்த அவர்கள் ஒரு மணி நேரம்  போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத் தனர். சம்பவம் குறித்து  வந்த ஆனைமலை போலீசார் விசாரணை நடத்தியதில் வீட்டில் மின்கசிவு ஏற்பட்டதன் காரணமாக வீடு தீ பற்றி எறிந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  இதில், வீட்டில் இருந்த டிவி, கட்டில், உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. தீ  பற்றியதற்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா  என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.