கோவை, பிப்.9- கோவையில் தேவாலயத்தில் செபஸ்தியர் சிலையை சேதப்படுத்திய இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை ராமநாதபுரம் டிரினிட்டி தேவாலயத்தின் வாயிலில் இருந்த புனித செபஸ்தியர் சிலையை கடந்த ஜன.23ம் தேதியன்று மர்மநபர்கள் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரிக்கையில், மதப்பதற் றத்தை உருவாக்க திட்டமிட்டு தேவாலயத்தின் மீது இந்து முன்னணி அமைப்பினர் தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது. இது தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினை சேர்ந்த தீபக், மதன்குமார், மரு தாச்சல மூர்த்தி மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட 17 வயது சிறு வனை தவிர மற்ற 3 பேரை யும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை மாநகர காவல் துறை ஆணையர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவினை சிறையில் உள்ள மதன்குமார், விவேக், மருதாசலமூர்த்தி ஆகிய மூவரிடமும் கோவை மாநகர காவல்துறையினர் வழங்கினர்.