districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

எங்க ஊர்ல நிறுத்த மாட்டீங்களா? தனியார் பேருந்தை சிறைபிடித்த மக்கள்

எங்க ஊர்ல நிறுத்த மாட்டீங்களா? தனியார் பேருந்தை சிறைபிடித்த மக்கள் கோவை, செப்.5- கருமத்தம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற பேருந்தை சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.  கோவை மாவட்டம், காந்திபுரம் மத்திய பேருந்து நிலை யத்திலிருந்து அவிநாசி சாலை வழியாக திருப்பூருக்கு ஏராள மான தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வரு கின்றன. இந்நிலையில், வியாழனன்று காலை காந்திபுரத்தில் இருந்து திருப்பூர் செல்லும் கே.எம்.எஸ் என்ற தனியார் பேருந்தில் கருமத்தம்பட்டி செல்வதற்காக சில பயணிகள்  ஏறி உள்ளனர். பேருந்து கிளம்பிய நிலையில் நடத்துனர்  கருமத்தம்பட்டியில் பேருந்து நிற்காது என கூறி அவர்களை திட்டி பாதி வழியிலேயே இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. பேருந்தில் இருந்து இறங்கிய பயணிகள், இதுகுறித்து ஊர் மக்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரி வித்துள்ளனர். பேருந்து கருமத்தம்பட்டி அருகே வந்தபோது  சுற்றி வளைத்து சிறைபிடித்த ஊர் பொதுமக்கள் ஓட்டுநர்  மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை யடுத்து அங்கு வந்த காவல் துறையினர் இரு தரப்பினரிட மும் பேச்சு வார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். ஊர்  பொதுமக்கள் பேருந்தை தடுத்து நிறுத்தி சிறைபிடித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்ட செல்போன் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொடிவேரியில் சிசிடிவி அமைக்க கோரிக்கை

கோபி, செப்.5- சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில்  கொண்டு கொடிவேரி தடுப்பணை பகுதியில் கண்காணிப்பு  கேமராக்களை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள்  வலியுறுத்தி உள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் கீழே விழும் தண்ணீர் அருவிபோல் காட்சிய ளிக்கும். அதை காண பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில்  சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடுவது வழக்கம்.  கொடிவேரி அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும்  குற்ற சம்பவங்களை தடுக்க அணையின் தெற்கு பகுதியில்  கடத்தூர் காவல்துறையினரும், வடக்கு பகுதியில் பங்களா புதூர் காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதோடு, சிசிடிவி கேமராக்கள் மூலமாக கண்காணித்து வருகின்ற னர். இந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்ற சம்பவங்களை  தடுப்பது மட்டுமின்றி, அணையில் நீரில் மூழ்கி இறப்பவர்க ளின் உடல்களை மீட்கவும் காவல்துறையின் மூன்றாவது கண் ணாக செயல்பட்டு வருகிறது.  இந்நிலையில் கொடிவேரி அணையின் வடக்கு பகுதி யான அரக்கன்கோட்டை பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க பங்களாபுதூர் காவல்துறையினர் ஐந்து சிசிடிவி கேம ராக்கள் அமைத்தனர். கேமராக்கள் காற்றினால் சிதறி சிதல மடைந்து. கடந்த  ஒருவருடமாக செயல்படாமல் உள்ளது. சிசி டிவி கேமராக்கள் காவல்துறையின் மூன்றாவது கண் செயல் படமால் இருப்பதால், அணையில் குளிக்கும் சுற்றுலாப் பயணி களின் நகை, பணம் போன்ற  உடமைகளுக்கு பாதுகாப்பு இல் லாத நிலை உள்ளது.  எனவே கொடிவேரி அணையின் செயல்படமால் உள்ள சிசிடிவி கேமராக்களை சரி செய்து, குற்ற சம்பவங்களை தடுக்க வேண்டும். பூட்டியே கிடக்கும் உடை மாற்றும் அறை, கழிப்பறை கட்டத்தை திறக்க வேண்டும்  என சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வண்டல் மண் திருட்டு: லாரிகளை சிறைபிடித்து போராட்டம்

கோவை, செப்.5- அன்னூரில் விவசாயிகள் பெயரில் குளங்களில் சட்டவிரோதமாக வண்டல் மண்ணை அள்ளி செல்வதாக குற்றஞ் சாட்டி அப்பகுதி பொதுமக்கள் லாரி களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடு பட்டனர். கோவை மாவட்டம், அன்னூர் மேட்டுப்பாளையம் பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்து றைக்கு சொந்தமான குளம் ஒன்று உள் ளது. அண்மையில் தமிழக அரசு விவ சாய பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்வதற்கும் குளம், ஏரிகள், குட்டை யில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. அந்த உத்தர வின் பேரில், அன்னூர் மேட்டுப்பாளை யம் குளத்திலும் விவசாய பயன்பாட் டுக்கு இந்த குளத்தில் இருந்து மண் எடுத்து சென்று விவசாய தோட்டங்க ளுக்கு உயிர் மண் உரமாக பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விவசாயிகள் வரு வாய் துறை மற்றும் மாவட்ட நிர்வா கத்தை அணுகி உரிய அனுமதியுடன் வண்டல் மண் எடுக்க துவங்கிய சிறிது நாட்களில் இந்த குளத்தில் மண் எடுக்க உள்ளே நுழைந்த மணல் கொள்ளையர்கள் வணீகரீதியாக வண்டல் மண் எடுத்து  செல்ல துவங்கினர். அரசு அனுமதியை  மீறி நூற்றுக்கணக்கான டிப்பர் லாரி கள் மூலம் வண்டல் மண் கடத்தப்பட்டு  ஒரு லோடு வண்டல் மண் ஆறாயிரம்  முதல் எட்டாயிரம் வரை கட்டிடப் பணிகள் மற்றும் இதர தேவைகளுக்கு விற்பனை  செய்யப்படுகிறது. மேலும், மூன்று அடி வண்டல் மண்  எடுக்க அரசு கூறிய நிலையில், 12 அடி  ஆழம் வரை மண் திருட்டு மாபியாக் களை இனியும் விடக்கூடாது என அந்த  கிராம மக்களே லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான லாரிகள் கிராம சாலைகளில் பயணிப்பதால் ஊர் பொதுமக்கள் நடந்து செல்லவே அச்ச மடைந்து வருவதாகவும் மண் திருட்டு  மாபியாக்களை தடுக்க வேண்டும். அவர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அன்னூர் மேட்டுப் பாளையம் மக்கள் போராட்டம் நடத்திய தால் பரபரப்பு ஏற்பட்டது.  இதனையடுத்து அங்கு வந்த அன் னூர் காவல்துறையினர் பொதுமக்களி டம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் உரிய அனுமதி இன்றி மண் எடுக்கும் லாரிகள் குறித்து நடவடிக்கை எடுக் கப்படும் என உறுதியளித்ததைத்தொ டர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. ஏற்கனவே கடந்த வாரம் கனிமவளத் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு வந்த  போது இந்த மாபியா கும்பல் லாரிகளை எடுத்து கொண்டு ஓடி விட்டதாக அந்த  கிராம மக்கள் தெரிவித்தது குறிப்பிடத் தக்கது.

மலை காய்கறிகள் விலை உயர்வு

உதகை, செப்.5- நீலகிரி மாவட்ட விவசா யிகள் தேயிலைக்கு அடுத்த படியாக கேரட், பீட்ரூட் உரு ளைக்கிழங்கு உள்ளிட்ட பல் வேறு வகையான மலை காய் கறிகளும் ப்ரூக்கோலி, தர் ணீப், சல்லரி போன்ற சீன வகை காய்கறிகள் சாகு படி செய்து வருகின்றனர்.  குறிப்பாக, உதகை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகு தியைச் சேர்ந்த விவசாயிகள் இவற்றை அதிக அளவில்  பயிரிட்டு வருகின்றனர். இவர்கள் உற்பத்தி செய்யும் மலை காய்கறிகளை உதகை யில் உள்ள காய்கறி ஏல மண்டிகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்து செல்கின்றனர். இதுவரை மலை காய்கறிகளின் விலை சராசரியாக விற்பனையாகி வந்து நிலையில், இந்த ஆண்டு தொடர் மழை மற் றும் வறட்சி காரணமாக அவற் றின் விலை தொடர்ந்து அதிக ரித்து வருகிறது. வழத் கத்தை விட இரண்டு மடங்கு காய்கறிகள் விலை அதிகரித் துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

அப்பர்பவானி குடிநீர் திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை

உதகை, செப். 5- மஞ்சூர் பகுதிகளின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அப்பர்பவானி கூட்டு குடி நீர் திட்டம் கொண்டு வர வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.   நீலகிரி மாவட்டம், மஞ்சூர் குந்தா தாலுகா வுக்குட்பட்ட கீழ்குந்தா, பிக்கட்டி பேரூராட்சி கள் மற்றும் குந்தா, முள்ளிகூர், பாலகொலா ஊராட்சிகளில் சுமார் 100க்கு  மேற்பட்ட கிரா மங்கள் உள்ளது. இக்கிராமங்களில் சுமார் 50  ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  மஞ்சூர் உட்பட பெரும்பா லான பகுதிகளிலும் கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் பற்றாகுறை அதிகரித்து வருகிறது. குந்தா பகுதியில் உள்ள நீர் தேக்கங்கள் முறையாக பாராமரிக்காததாலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை, குடி யிருப்புகளுக்கேற்றவாறு புதிய குடிநீராதா ரங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்காத காரணத்தால் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு முக் கிய காரணமாகும். பெரும்பாலான நீர்த்தேக்கங்களிலும் சேறு, சகதிகள் நிறைந்துள்ளதால் குறைந்த அளவிலான நீரை சேமிக்க முடிகிறது. கோடை மற்றும் வறட்சி காலங்களில் கிராமங் கள் தோறும் பற்றாக்குறை ஏற்படுவதுடன் குடி நீர் விநியோகம் அடியோடு பாதிக்கப்படு வது வாடிக்கையாக உள்ளது. இதுபோன்ற சமயங்களில் பொதுமக்கள் காலிக்குடங்களு டன் தொலை துாரங்களில் குடிநீருக்காக அலைய வேண்டியுள்ளது. குடிநீர் தட்டுபாடு பிரச்னைக்கு தீர்வு காண  கீழ்குந்தா, பிக்கட்டி பேரூராட்சிகள் உட்பட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் உள்ள நீர் தேக்கங்களை தூர்வாரி அதில்  உள்ள சேறு, சகதிகளை அகற்றி முறையாக பராமரிக்க வேண்டும். இது மட்டுமின்றி அதி கரித்து வரும் மக்கள் தொகைக் கேற்ப ஏற் படும் குடிநீர் பற்றாகுறையை தவிர்க்கவும், எதிர்காலத்தில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில் அப்பர்பவானி கூட்டு குடிநீர் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும். மாவட்டத்தில் பெரிய அணை யாக உள்ள அப்பர்பவானி அணையில் இருந்து குழாய்கள் மூலம் நீரை கொண்டு வந்து கிண்ணக்கொரை, மேல்குந்தா, மஞ் சூர், பிக்கட்டி, எடக்காடு, உள்ளிட்ட பகுதிக ளில் குடிநீர் தொட்டிகளில் சேமிப்பதன் மூலம் குந்தா பகுதிகளின் குடிநீர் பிரச்னைக்கு நிரந் தர தீர்வு காணமுடியும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

விஷமத்தனத்தை பரப்பும் இந்து முன்னணியினர்

திருப்பூர், செப்.5 - விநாயகர் சதுர்த்தி விழாவை, திருப்பூர்  மாநகரப் பகுதியில் இந்து முன்னணியினர் பிரிவினையை தூண்டும் நோக்கத்தோடு, விஷமத்தனமான கருத்துக்களுடைய  துண்டறிக்கையை வீடு வீடாக வழங்கி வரு வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  விநாயகர் சதுர்த்தி செப்.7 ஆம் தேதி  கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்து  முன்னணியினர் திருப்பூரில் பல்வேறு பகுதி களில் இருக்கும் வீடுகள், கடைகள் மற்றும்  வணிக நிறுவனங்களில் மிரட்டி வசூல் செய்வ தாக காவல் துறையில் புகார்கள் வந்த வண் ணம் உள்ளன. சில பகுதிகளில் பணம்  கொடுக்காதவர்களை தாக்கி கைது செய்யப் பட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.  இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட எம்.எஸ்.நகர், கொங்கு மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் வீடு கள், கடைகளில் விஷமத்தனமான கருத்துக் களுடைய துண்டறிக்கை விநியோகித்து வரு கின்றனர். உண்மைக்கு புறம்பாக, அறிவிய லுக்கு விரோதமான கருத்துகளை துண்ட றிக்கைகளாக அச்சடித்து விநியோகிக்கும் இந்து முன்னணியினர் மீதும், இதுபோன்ற  பிரிவினையை தூண்டும் துண்டறிக்கையை  அச்சடித்த அச்சகத்தின் உரிமையாளர் களை கைது செய்ய வேண்டும் என சமூக  செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.