districts

img

குருமன்ஸ் மக்களுக்கு பழங்குடியின சாதிச்சான்றிதழ்

தருமபுரி, ஜன.4- குருமன்ஸ் மக்களுக்கு பழங் குடியின சாதிச்சான்றிதழ் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் தருமபுரி சார் ஆட்சியர்‌ சித்ரா விஜயனிடம் மனு அளித்தனர். தருமபுரி வருவாய் கோட்டத்திற் குட்பட்ட தருமபுரி, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பென்னாகரம் ஆகிய வட்டங்களில் 120க்கும் மேற்பட்ட கிராமங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குருமனஸ் பழங்குடி மக் கள் வசித்து வருகின்றனர். உள் ளாட்சி அமைப்புகளில் பழங்குடியி னர் ஒதுக்கீட்டில் ஊராட்சி தலைவர் கள், ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு  உறுப்பினர்கள் என வெற்றியும் பெற் றுள்ளனர். இந்நிலையில், குரு மன்ஸ் பழங்குடியினர் மக்கள் பழங் குடியின சாதிச்சான்றிதழ் கேட்டு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே மனு அளித்துள்ளனர். ஆனால்,  அளித்த மனுக்கள் மீது விசாரணை செய்து சாதிச்சான்றிதழ் வழங்கு வது நிலுவையில் உள்ளது. மேலும், 809 மனுக்கள் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை செய்யாமல் நிலுவை யில் உள்ளது.  எனவே, தமிழக முதல்வர் மற் றும் தலைமை செயலாளர் உத்திர வின்படி, நிலுவையில் உள்ள மனுக் கள் மீது விசாரணை செய்து குரு மன்ஸ்  பழங்குடி சாதிச்சான்றிதழ் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங் கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லி பாபு தலைமையில் தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜனிடம் மனு அளிக்கப்பட்டது. இதில், தருமபுரி மாவட்ட குருமன்ஸ் பழங்குடி நலச் சங்க மாவட்ட தலைவர் டி.மாதை யன், உதவித்தலைவர் காவேரி, நிர் வாகிகள் சித்துராஜ், சந்திரசேகரன், பழனிச்சாமி, லட்சுமி காந்தன் ஆகி யோர் உடனிருந்தனர்.