கோவை, ஏப்.24– மலைப்பகுதியில் பணியாற் றும் ஆசிரியர்களுக்கு மலைப் படியை பெறுவதற்கு போராடிய போராளிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தொடர் முயற்சி மேற்கொண்ட பி.ஆர்.நட ராஜன் எம்.பி., கௌரவிக்கப்பட் டார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசி ரியர் கூட்டணியின் காரமடை வட்ட கிளை சார்பில் இடைநிலை ஆசிரி யர் ஊதிய மீட்பு அரசாணை எரிப்பு போராட்டத்தில் 17 பி பெற்ற போரா ளிகளுக்கு பாராட்டு விழா மற் றும் மலைப்படி உரிமையை போராடி வென்று தந்தவர்களை பாராட்டுதல், புதியதாக இணைந்த உறுப்பினர்களை வாழ்த்தி வரவேற்றல் ஆகிய முப்பெரும் விழா காரமடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள் ளியில் ஞாயிறன்று நடைபெற் றது. இந்நிகழ்ச்சிக்கு ஆசிரியர் கூட்டணியின் வட்டக்கிளை தலை வர் அ.மனிமலர் தலைமை வகித் தார். செயலாளர் இரா.கனகராஜ் வரவேற்புரையாற்றினார். இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரி யர் கூட்டணியின் பொதுச்செய லாளர் ச.மயில் பங்கேற்று சிறப்பு ரையாற்றினார்.
இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள் ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக பில்லூர் அணை, அத்திக்கிடவு, பரளி, மானால், பரளி பில்லூர் ஆகிய பகுதிக ளில் பணியாற்றும் ஆசிரியர்களுக் கான மலைப்படி தொடர்ந்து மறுக் கப்பட்டு வந்தது. சட்டப்படியான உரிமைகள் வழங்கப்பட வேண் டும் என தொடர்ந்து ஆசிரியர் கூட்டணியின் தலைமையில் ஆசி ரியர்கள் போராடி வந்தனர். இது குறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கவ னத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து பி.ஆர்.நடராஜன் எம்.பி., முறை யிட்டார். மேலும், தொடர்ந்து துறை சார்ந்த அதிகாரிகளின் கவ னத்திற்கு கொண்டு சென்று சட்டப்படியான மலைப்படி உரி மையை பெற்றுக்கொடுத்தார். இந்நிலையில், பல ஆண்டு காலம் வழங்கப்படாமல் இருந்த இந்த மலைவாழ் படி உரிமையை பெற்றுக்கொடுத்த கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனும், இதற்கான தொடர் போராட்டத்தை முன்னெடுத்த ஆசிரிகளும் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டனர். இதே போன்று இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு அரசாணை எரிப்பு போராட்டத்தில் பங்கேற்று 17 பி பெற்ற இரா.கனகராஜ், அ.மனி மலர் ஆகியோரும் கௌரவிக்கப் பட்டனர். இந்நிகழ்வில் ஏராளமா னோர் பங்கேற்றனர்.