districts

img

தருமபுரியில் கனமழை: பசுமை குடில்கள் சேதம்

தருமபுரி, செப்.1- தருமபுரி மாவட்டம்  முழுவதும் சூறைக்காற்று டன் கனமழை பெய்த நிலையில், இதனால் காரி மங்கலம் அருகே அமைக் கப்பட்டிருந்த பசுமை குடில் கள் சரிந்து சேதமடைந்தது. தருமபுரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட் களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப் பட்டாலும், மாலை நேரங்களில் தொடர்ந்து  மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், மாவட்டம் முழுவதும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்த கனமழையால் ஆங்காங்கே உள்ள  நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிக ரித்தது. காரிமங்கலம், பாலக்கோடு, அரூர், மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் ஆங்காங்கே மழைநீர் தேங் கியது. இதனால் அந்தந்த பகுதிகளில் உள்ள  சாலைகள் சேதமடைந்தது. காரிமங்கலம் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் திண்டல் அருகே உள்ள உச்சம் பட்டி கிராமத்தில் விவசாயிகள் அமைத் திருந்த பசுமை குடில்கள் கீழே சரிந்து சேத மடைந்தது. பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு இருந்த இந்த பசுமை குடில் கள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்த  பசுமைக் குடிலில் வைக்கப்பட்டிருந்த குடை மிளகாய், தக்காளி செடிகளும் சேதமானது. இதேபோன்று தருமபுரி நகர் பகுதி மற்றும்  செட்டிக்கரை, ராஜாப்பேட்டை, பழைய தரும புரி, பனந்தோப்பு, நடுப்பட்டி, சோலைக் கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை  பெய்தது. மேலும் இரவு ஒன்பது மணிக்கு மேல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மழையால் சாலையில் கழிவுநீருடன் சாக் கடை நீரும் சேர்ந்து ஆறாக ஓடியது. சில இடங்களில் குளம்போல் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.