திருப்பூர், ஜூன் 27- திருப்பூர் மாநகராட்சி கிழக்கு எல் லைக்கு அருகில் அமைந்துள்ள மூளிக்குளம் வறண்டு உள்ளதால் சுற்றுவட்டார பகுதிக ளில் நிலத்தடி நீர் குறைந்து, தண்ணீர் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சியின் கிழக்கு எல் லையில், ஊத்துக்குளி ரோடு பாரப்பாளை யம் பகுதியில், மூளிக்குளம் உள்ளது. இந்தக் குளத்துக்கு, அணைக்காடு தடுப்பணையில் இருந்து, நொய்யல் நீர் வாய்க்கால் வழியாக செல்கிறது. மூளிக்குளம் தற்போது வறண்டு காணப்படுகிறது. இதனால் பாளையக்காடு, கருமாரம்பாளையம், மண்ணரை உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள் ளதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து 33ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துக்கிருஷ் ணன் கூறுகையில், இச்சுற்று வட்டார பகுதிக ளில் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்குவது மூளிக்குளம்தான். சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சி பணிகள் நொய்யல் ஆற்றின் கரையோரங்க ளில் நடைபெற்று வருகிறது. அணைக்காடு பகுதியில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி மூளிக்குளத்திற்கு நீர்வரும் தடுப்பணைக் கால்வாய் உடைக்கப் பட்டுள்ளது. இதனால் மூளிக்குளத்திற்கு தண் ணீர் வரத்து தடைபட்டுள்ளது. மேலும் பாளை யக்காடு, கருமாரம்பாளையம், மண்ணரை ஆகிய பகுதிகளில் இருந்து சாக்கடை கால் வாய் மூளிக்குளத்திற்கு வரும் வாய்க்கா லில் கலக்கிறது. இதுகுறித்து மாநகராட்சி கூட்டத்திலும் பேசப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி அதி காரிகள் இப்பகுதியில் வந்து ஆய்வு மேற் கொண்டு, சாக்கடை நீர் செல்வதற்கான மாற்று திட்டத்தை உருவாக்கி, நிதி ஒதுக்கி, சாக்கடை நீர் மூளிக்குளத்தில் கலக்காதவாறு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரி வித்தனர். இந்த மழைக்காலத்திற்குள் அணைக் காடு பகுதியில் நொய்யல் ஆற்றில் உடைக் கப்பட்டுள்ள பகுதியை சீரமைத்தால் மூளிக்கு ளத்திற்கு மீண்டும் தண்ணீர் வரத்தொடங் கும். மேலும் மழைக்காலம் என்பதால் தண் ணீர் வரத்தும் அதிகமாக இருக்கும். இப்பகு தியில் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து தண் ணீர் பற்றாக்குறை இருக்காது என தெரிவித் தார். இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகை யில், கடந்த ஓராண்டாக பாரப்பாளையம் மூளிக்குளம் வறண்டு காணப்படுகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் அணைக் காடு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற் கொள்வதாகக் கூறுகின்றனர். ஓராண்டுக்கு மேலாக இப்பணிகள் நடைபெற்ற வருகிறது. இதனால், குளத்துப்பாளையம், பாரப்பாளை யம், சத்யாகாலனி, மண்ணரை, கருமாரம்பா ளையம், பெரியாயிபாளையம், ஆலமரத் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள் ளது. விரைவில் இப்பணிகளை முடித்து இப்ப குதியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க வேண்டும். மழைக்காலம் வருவதற்கு முன் இப்பணிகளை முடித்தால் மூளிக்குளம் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்று தெரி வித்தனர். ஆற்றின் குறுகே சுவர்: அணைக்காடு பகுதியில் உள்ள நொய் யல் ஆற்று கரையோரம் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இச்சாலை யில் ஆற்று நீர் புகுந்து விடக்கூடாது என்ப தற்காக ஆற்றின் குறுக்கே சுவர் எழுப்பட்டுள் ளது.
இதனால் பெரும் மழை பெய்தால் இப்ப குதியில் இருந்து வெளியேறும் மழை நீர் ஆற் றில் கலக்காமல் சாலையிலேயே தேங்கி நிற்க வாய்ப்புள்ளது. மேலும், இப்பகுதிக்கு அருகாமையில் நீர்வளத்துறை சார்பில் வாக னங்கள் செல்லக் கூடாது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாகனங்கள் சென்று கொண்டு தான் உள் ளன. இதுகுறித்து இப்பகுதியில் உள்ள மக்கள் சிலர் கூறுகையில், ஓர் ஆண்டுக்கு மேலாக இப்பகுதியில் சீரமைப்புப் பணிகள் நடை பெற்று வருகிறது. பல பகுதிகளிலிருந்து வெளியேறும் சாக்கடை நீர் செல்ல பாதை இல்லாமல் மூளிக்குளத்திற்கு நீர் செல்லும் வாய்க்காலில் கலக்கிறது. மழை காலங்களில் சாக்கடை நீர் வீடுகளுக்குள் வருவதாகவும், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாவும் தெரி வித்தனர். மூளிக்குளத்தை தனியார் தன்னார்வ அமைப்பு பராமரித்து வருகிறது. மூளிக்குளம் பகுதி பராமரிப்பு மேம்பாட்டுப் பணிகளை கடந்த ஆண்டு அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், மாந கராட்சி மேயர் ந.தினேஷ்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன்பி றகு கடந்த ஜனவரி மாதம் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அமைச்சர், மேயர், அரசு உயர் அதிகாரிகள் என பலரும் இதை ஆய்வு செய்த சென்றபோதும், சீரமைப்புப் பணிகள் இன்னும் முடியவில்லை. மூளிக்குளத்திற்கு தண்ணீர் வரத்துக்கு ஏற்பாடு செய்ய வில்லை. சீரமைப்புப் பணிகளை விரைவாக முடித்து உடைக்கப்பட்டுள்ள செக் டேமை திறந்து விட்டு மூளிக்குளத்திற்கு மீண்டும் தண்ணீர் வரத்தை உறுதிபடுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.