districts

img

அரசு ஊழியர் சங்க சிறப்பு கருத்தரங்கம்

ஈரோடு, மே 21- ஓய்வூதியம் நேற்று, இன்று, நாளை என் கிற தலைப்பில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஈரோட்டில் சிறப்பு கருத் தரங்கம் வியாழனன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு மாவட்ட தலைவர் அ.ராக்கிமுத்து தலைமை வகித்தார். துணை  தலைவர் ஆர்.குமரவேல் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ச.விஜயமனோகரன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் கு.குமரேசன், அரசு ஊழி யர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் கே.ராஜ்குமார் ஆகியோர் கருத்துரையாற் றினார். நிறைவாக மாவட்ட பொருளாளர் ரா. சுமதி நன்றி கூறினார்.