districts

img

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி அரசு ஊழியர்கள் தர்ணா

தருமபுரி, பிப்.10- தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண் டும், என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் திங்களன்று தர் ணாவில் ஈடுபட்டனர். தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிப்படி, புதிய பென்சன் திட் டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம், பெறுபவர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். ஊதிய மாற்றத்தின் போது வழங்கப் படாத 21 மாத நிலுவைத்தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு ஊதி யம் வழங்க வேண்டும். கருணை அடிப் படையிலான பணி நியமனங்கள் 5 சத விகிதமாக குறைத்திருப்பதை கைவிட்டு, 25 சதவிகிதம் பணி வாய்ப்பு வழங்க வேண்டும். அலுவலக பணிநேரத்திற் குப் பின்பும், விடுமுறை தினங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்துவதை கைவிட வேண்டும். காலை சிற்றுண்டி திட் டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரி வுப்படுத்தி, சத்துணவு ஊழியர்களைக் கொண்டு நடைமுறைப்படுத்த வேண் டும். அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை தமிழக அரசே ஏற்று  நடத்த வேண்டும். காலமுறை ஊதிய நடைமுறையில் நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் திங்களன்று தர் ணாவில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் நடைபெற்ற 24 மணி நேர தர்ணா விற்கு, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன் தலைமை  வகித்தார். மாநில துணை பொதுச்செய லாளர் அண்ணா குபேரன் துவக்கவுரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் ஏ. தெய்வானை, பொருளாளர் எம்.அன்ப ழகன், துணைச்செயலாளர்கள் பி.சங் கர், பி.கிருஷ்ணமூர்த்தி, இணைச்செய லாளர்கள் கே.தேவகி, ஆர்.முருகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி  பேசினர். இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலை வர் ஆர்.ஆறுமுகம், அரசு ஊழியர் சங்க  முன்னாள் செயலாளர் ஏ.சேகர், ஜாக்டோ - ஜியோ நிதி கப்பாளர் கே.புக ழேந்தி, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் சி.துரைவேல், வேளாண்மைத்துறை அமைச்சு பணி யாளர் சங்க மாநிலச் செயலாளர் ஆர்.ஜெயவேல், சத்துணவு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் பெ.மகேஸ்வரி, நூலகத்துறை அலுவலர் சங்க மாநிலத்  தலைவர் டி.சண்முகம், சத்துணவு மற் றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி. காவேரி ஆகியோர் வாழ்த்தி பேசினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.ஜீவா  நிறைவுரையாற்றினார். கோவை கோவை தெற்கு வட்டாட்சியர் அலு வலக வளாகத்தில் நடைபெற்ற தர்ணா விற்கு, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ச.ஜெகநாதன் தலைமை வகித் தார். இணைச்செயலாளர் ஆர்.மாலதி ராணி வரவேற்றார். சிஐடியு மாவட்டச்  செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி துவக் கவுரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி.செந்தில் குமார், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழி யர் கூட்டமைப்பின் மாவட்ட இணைச் செயலாளர் வி.சுரேஷ், அகில இந்திய  வங்கி ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் ஆர்.மகேஸ்வரன் ஆகியோர் கோரிக் கைகளை விளக்கி பேசினர். இதில், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க  மாநில துணைத்தலைவர் என்.அரங்க நாதன், மாவட்டச் செயலாளர் கே.அரு ணகிரி, தலைவர் மதன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலைவர் அ.தங்கபாசு, சத்துணவு, அங் கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் கே.பழனிச்சாமி, தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலை வர் சி.அரசு, தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் எம்.ராஜசேகர், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்ட தாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர்  த.சரவணன்குமார் உட்பட பலர் பங் கேற்றனர். திருப்பூர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு, அரசு ஊழியர் சங்க மாவட் டத் தலைவர் ராணி தலைமையில் தர்ணா நடைபெற்றது. நெடுஞ்சாலை ஊழியர் சங்கம் சார்பில், தப்பாட்டம் வாத்தியங் கள் முழங்க தர்ணா துவங்கியது. மாநில துணைத்தலைவர் அம்சராஜ் துவக்கவு ரையாற்றினார். மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் பல்வேறு சங் கங்களைச் சேர்ந்த மாநில, மாவட்ட நிர் வாகிகள் உடபட பலர் கலந்து கொண்ட னர்.  சேலம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற தர்ணாவிற்கு, அரசு ஊழி யர் சங்க மாவட்டத் தலைவர் ந.திரு வேரங்கன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் மு.செல்வராணி துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சுரேஷ், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலை வர் வெ.அர்த்தனாரி, சிஐடியு மாவட்டத் தலைவர் உதயகுமார், எல்ஐசி ஊழி யர் சங்க பொதுச்செயலாளர் ஆர்.ஆனந்த், அரசு ஓய்வு பெற்றோர் சங்க மாநில துணைத்தலைவர் ஆர்.சுப்பிர மணியம் உட்பட பலர் கலந்து கொண்ட னர். நாமக்கல் நாமக்கல் பூங்கா சாலையில், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் தன சேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வருவாய்த்துறை அலு வலர் சங்க மாவட்டத் தலைவர் ஆனந் தன், நிலஅளவை அலுவலர் ஒன்றிப் பின் மாவட்டச் செயலாளர் செந்தில் குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர் சங்க மாநில துணைத்தலைவர் இளங்கோ துவக்க வுரையாற்றினார். இதில் அரசு ஊழியர்  சங்க நாமக்கல் மாவட்ட நிர்வாகி ராமச் சந்திரன் மற்றும் பல்வேறு சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையத்தில் நடைபெற்ற தர்ணா விற்கு, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் சீனிவா சன் கண்டன உரையாற்றினார். இதில்  சங்கத்தின் நிர்வாகிகள் செந்தில்நா தன், ராக்கிமுத்து, கெளரிசங்கர் மற்றும் பல்வேறு சங்கத்தினர் கலந்து கொண்ட னர்.