கோவை, ஜன.16- உழவனின் தோழனாய் இருக்கிற மாடுகளை கௌரவிக்கும் வகையில், மாடுகளை குளிப்பாட்டி அலங்கரித்து பொங்கல் வைத்து விவசாயிகள் மாட் டுப்பொங்கலை கொண்டாடினர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண் டிகை, உலகெங்கும் உள்ள தமிழர்க ளால் கோலாகலமாக கொண்டாடப் பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திங்களன்று மாட்டு பொங்கல் கொண் டாடப்பட்டது. விவசாயத்தில் உழவர் களுடன் சேர்ந்து மாடுகளுக்கும் முக் கிய பங்கு இருக்கிறது. மாடுகளின் உழைப்பை காலப்போக்கில் மனிதம் மறந்துவிட கூடாது, உழைப்பை அங்கீ கரித்து அவற்றை கவுரவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சூரியனை வழிபட்ட பிறகு அடுத்த நாள் மாடுகளுக்கு பிரத் யேகமாக கொண்டாடப்படுவது தான் மாட்டு பொங்கல். கோவை புறநகரப் பகுதிகளான அன்னூர், சூலூர் சுற்று வட்டார விவ சாயிகள் மாட்டுத் தொழுவத்தை காலை முதலே சுத்தம் செய்தனர். மேலும் மாடு களை குளிப்பாட்டி சுத்தம் செய்து அவற் றின் கொம்புகளில் வர்ணம் பூசி அவற்றை மேலும் பல விதமாக அலங் கரித்தனர். மேலும் மாடுகளுக்கு புதிய மூக்கணாங் கயிறு, தாம்பு கயிறு உள் ளிட்டவற்றையும் அணிவித்து அலங் கரித்தனர். உழவுக்கு உதவும் கருவி களையும் சுத்தம் செய்து சந்தனம், குங் குமம் வைத்து மாடுகளோடு சேர்த்து அவற்றையும் வழிபட்டனர். தொழுவத் தில் பொங்கல் வைத்து அதனை மாடு களுக்கு ஊட்டி தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.