districts

img

கேங்மேன்களுக்கு ஊதிய உயர்வு வழங்குக

கோவை, செப்.20- கேங்மேன்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற, ஆர்ப்பாட்டத்திற்கு, கோட்டத் தலைவர்கள் தலைமை ஏற்றனர். இதில், 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வழங்க உள்ள  ஊதிய உயர்வை கேங்மேன் பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். மின் தடை நீக்கம், அலுவலகப்பணி உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்து வருகின்ற கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளராக மாற்றம் செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர் தலைவர் வீ.மதுசூதனன், மண்டலச் செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன், வட்டப் பொருளாளர் ஏ.சாதிக்பாட்ஷா உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.