உதகை, ஜன.18- குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் ராட்சத பாறை விழுந்ததால், வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்துள்ள னர். நீலகிரி மாவட்டம், குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்க பணி கடந்த 10 மாதங்களுக்கு மேல் நடைபெற்று வருகிறது. இதற்காக நெடுஞ்சாலைத் துறையினர் ராட்சத பொக்லைன் உதவியுடன் மண் மற்றும் பாறைகளை அகற்றி வருகின்றனர். இருப்பினும் சில இடங்களில் ராட்சத பாறைகள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இத னால், அவ்வழியே செல்லக்குடிய வாகன ஓட்டிகள் அச்சத்து டனே பயணித்து வந்தனர். இந்நிலையில், குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் ஞாயிறன்று மழை பெய்தது. இத னால், மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி அருகே ராட் சத பாறை சரிந்து கீழே விழுந்துள்ளது. இதனால் சாலை தற்போது தொங்கிக் கொண்டிருக்கிறது. மேலும், சாலை சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் உரு வாகியுள்ளது. மேலும், தொடர்ந்து மழை பெய்தால் சாலை இடிந்து விழும் அபாயமும் உள்ளது. எனவே, நெடுஞ்சாலைத் துறை யினர் வேலைகளை துரிதப்படுத்தி, சீரமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.