திருப்பூர், டிச.5- திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம், எம்.எஸ்.நகர் செல்லும் சாலையில் குப்பைக் கொண்டு செல்லும் வாக னத்தில் குப்பைகளுக்கு மேல் தூய்மை பணி யாளர்கள் அமர்ந்து செல்லும் அவலம் திங்க ளன்று மீண்டும் நிகழ்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் தூய்மை பணி யாளர்கள் 10ற்கும் மேற்பட்டவர்களை உரி மம் மற்றும் காப்பீடு முடிந்த வாகனத்தில் ஏற் றிச் சென்றதைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி சுவரொட்டி ஒட்டி பிரச்சாரம் செய்தார்கள். இதையடுத்து முதல் மற்றும் இரண்டாம் மண்டலங்களில் தூய்மை பணி செய்வதற்கான ஒப்பந்தம் எடுத்திருந்த ஸ்ரீனி வாஸ் வேஸ்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ் லிமி டெட் என்ற தனியார் நிறுவனம் தூய்மை பணி யாளர்களைக் குப்பை கொண்டு செல்லும் வாகனத்தில் ஏற்றி சென்றதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டதுடன் மீண்டும் இதுபோல் சம்பவம் நிகழாது என்று உறுதியளித்தனர்.
இந்நிலையில் டிசம்பர் 5ஆம் தேதி திங்களன்று குப்பை எடுத்தும் செல்லும் வாகனத்தில், குப்பைகளுக்கு மேல் உயி ருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் தூய்மை பணியாளர்கள் அமர வைக்கப்பட்டு பய ணித்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் அந்த வாகனத்தில் பதிவு எண் இல்லாதது, வாக னத்தின் உரிமம் மற்றும் காப்பீடு காலாவதி ஆகிவிட்டதா என்ற சந்தேகத்தையும் எழுப்பி உள்ளது. இது குறித்து தூய்மை பணியாளர் ஒருவ ரிடம் கேட்டபோது, “ஒரு சில ஒப்பந்த பணியா ளர்கள் மட்டுமே வாகனங்கள் வைத்திருக் கிறார்கள். பெரும்பாலானோர் பேருந்து களை நம்பித்தான் இருக்கிறோம். சில நேரங் களில் சுகாதார அலுவலர்கள் ஒரு குறிப் பிட்ட இடத்தில் இருப்பார்கள். அந்த நேரங் களில் கட்டாயத்தின் அடிப்படையிலேயே குப்பை வாகனங்களில் பயணிக்க வேண்டி இருக்கிறது. இதனால் நோய் தொற்று ஏற்பட் டுப் பல வேதனைகளுக்கு உட்படுகிறோம்” என்று கூறினார். தூய்மை பணிகளை மேற்கொள்ள ஒப் பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனங்கள் முறையான பாதுகாப்பு வசதிகளைச் செய்து தருவதை மாநகராட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். மேலும் விதிமீறல்கள் நடக்கும்போது சட்டப்படி நடவடிக்கை எடுப் பதன் மூலம் மட்டுமே இதுபோன்ற சம்பவங் கள் நிகழாமல் தடுக்க முடியும். (ந.நி.)