districts

img

உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் விரக்தி தக்காளிகளை குப்பையில் கொட்டி சென்றனர்

கோவை, ஜூலை 18- தக்காளிக்கு உரிய விலை கிடைக்கா ததால் விரக்தியடைந்த பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதி விவசாயிகள் தக்காளிகளை குப்பையில் கொட்டி விட்டு சென்றுள்ளனர். கோவை பொள்ளாச்சி, கிணத்துக் கடவு பகுதியில் தக்காளி அதிகப்படி யாக உற்பத்தி செய்யப்படுகிறது. கிணத் துக்கடவு தக்காளி மார்க்கெட்டில் பெரு மளவிலான வியாபாரிகள், சந்தை வியா பாரிகளிடமிருந்து தக்காளிகளை  விலைக்கு வாங்கி கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் வியாபாரிகள் அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தக்காளி ஒரு பெட்டி (15 கிலோ அளவு) ரூபாய் ஆயிரம் வரை விற்பனையானது. தற்போது இந்த ஒரு பெட்டியின் விலை 50 ரூபாய்க்கு கீழ் சென்றது. மேலும், கிணத்துக்கடவு மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் வராத தால் 50 ரூபாய்க்கும் தக்காளி விற்பனை யாகாமல் அப்படியே கிடப்பில் கிடந் தது. இதனால் கவலையடைந்த விவசா யிகள் தாங்கள் கொண்டு வந்த தக்காளி களை பெட்டிபெட்டியாக குப்பையில் கொட்டிவிட்டு சென்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகை யில், ஒரு ஏக்கர் தக்காளி நடவு செய்வ தற்கு ரூபாய் 75 ஆயிரம் ரூபாய் வரை  செலவாகும். சரியான விலைக்கு தக் காளி விற்பனை ஆகாததால் விவசாயி களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு தக்காளிக்கு உரிய விலை  நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.