திருப்பூர், மார்ச் 23- இந்திய சுதந்திரப் போராட்ட தியா கிகள் மாவீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூரில் பல் வேறு அமைப்பினர் சுதந்திரத்தைப் பாதுகாப்போம் என்று உறுதியேற்று நினைவஞ்சலி செலுத்தினர். இந்திய மாணவர் சங்கம் சார்பில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நினைவு தின நிகழ்வுக்கு மாணவர் சங்கத்தின் கல்லூரி கிளை தலைவர் உதயராஜ் தலைமை ஏற்றார். இதில், மாவட்ட செயலாளர் தௌ. சம்சீர் அகமது, மாவட்ட துணைத் தலைவர்கள் கல்கிராஜ், கிருஷ்ண குமார், கல்லூரி கிளை செயலாளர் சபரிநாதன் உட்பட திரளான மாண வர்கள் பங்கேற்றனர். அவிநாசி ஒன்றியம், பெரியாயிபா ளையம் திருவள்ளுவர் அரசு மேல் நிலைப்பள்ளியில் இந்திய மாணவர் சங்கத்தினர் நடத்திய நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு அவிநாசி தாலுகாக்குழு உறுப்பினர் உதயராஜ் தலைமை ஏற்றார். தாலுகா செயலாளர் மணி கண்டன், சூரியமணி உள்ளிட்ட பள்ளி மாணவர்கள் 50க்கும் மேற்பட்ட வர்கள் கலந்து கொண்டனர்
அனுப்பர்பாளையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கக் கிளை சார் பில் நினைவேந்தல் நிகழ்வு வியாழ னன்று நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரச் செயலாளர் ச.நந்தகோபால், பனியன் சங்க வேலம்பாளையம் ஏரியா கமிட்டி தலைவர் எம்.பாண்டி யராஜ், வாலிபர் சங்க வேலம்பாளை யம் நகரச் செயலாளர் எஸ்.வசந்த், கிளை நிர்வாகிகள் நாகேந்திரன், சதீஷ்குமார், மாணவர் சங்க நிர்வாகி கதிரவன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். உடுமலைபேட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான ஸ்டாலின் நிலையத்தில் வியாழ னன்று விடுதலை போராட்ட வீரர் கள் தியாகிகள் மாவீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுருவின் 92 ஆவது நினைவுநாளில் மலரஞ்சலி வீரவ ணக்கம் செலுத்தப்பட்டது. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடிமங் கலம் ஒன்றியக்குழு உறுப்பினர்.வெ. ரங்கநாதன் தலைமையில் உடுமலை ஒன்றியச் செயலாளர் கி.கனகராஜ், கமிட்டி உறுப்பினர்கள் எஸ்.ஜெகதீ சன், ஓம்பிரகாஷ், தங்கவடிவேலன், உட்பட பலர் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் திருப்பூர் வடக்கு ஒன்றியம், அங்கேரிபாளையம், அவினாசிக வுண்டம்பாளையம், குருவாயூரப் பன் நகர் ஆகிய கிளைகளின் சார்பில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோ ரின் நினைவு தினம் கடைப்பிடிக்கப் பட்டது. இதில் சிஐடியு சார்பில் சந்தி ரன், வாலிபர் சங்க ஒன்றிய துணைச் செயலாளர் நரேந்திரபிரசாத், ஒன்றி யக்குழு உறுப்பினர் கதிர், கிளை நிர் வாகி செந்தில் உள்ளிட்டோர் பங்கேற் றனர். நெசவாளர் காலனி பகத்சிங் சிலம்பப் பயிற்சிப் பள்ளியில் நடை பெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் வாலிபர் சங்க வடக்கு ஒன்றியத் தலைவர் ரேவந்த், ஒன்றியச் செய லாளர் சந்தோஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜசேகர், பயிற்சியா ளர் ரிதன்யா மற்றும் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.