districts

img

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம்

நாமக்கல், பிப்.4- திருச்செங்கோடு நகராட்சியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு நகராட்சியில் உள்ள மாணவ, மாணவிகளை டிஎன்பிஎஸ்சி மற்றும் யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு தயார்படுத் தும் வகையில், சந்தைப்பேட்டை பகு தியில் நகராட்சி சார்பாக அறிவுசார் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த  மையத்தில் அரசு தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப் படுகின்றன. திருச்செங்கோடு நக ராட்சியும், கேஎஸ்ஆர் கல்வி நிறுவ னங்களும் இணைந்து வருகின்ற 2024 ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு களை எதிர்கொள்ளும் விதமாக, கிராம நிர்வாக அலுவலர். உதவி அலுவலர் மற்றும் இதர காலிப்பணி யிடங்கள் உள்ளிட்ட 6224 இடங்க ளுக்கு போட்டி தேர்வுகள் நடத்தப் படுகின்றது. இப்போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் விதமாக வாரந்தோ றும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நி லையில், போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை திருச் செங்கோடு நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ் பாபு தொடங்கி வைத் தார். வெவ்வேறு போட்டித்தேர்வு நிறு வனங்களில் இருந்தும், பயிற்சியா ளர்கள் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். இம்மை யத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இணைந்து பயிற்சி பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக நகராட்சி தலை வர் நளினி சுரேஷ்பாபு கூறுகையில், டிஎன்பிஎஸ்சி மற்றும் யுபிஎஸ்சி தேர் வுகளில் இந்த பகுதியைச் சேர்ந்த  மாணவ, மாணவிகள் இந்த பயிற்சி  மையத்திலிருந்து தேர்வு பெற்றால் அது எங்களது வெற்றியாக நாங்கள் கருதுவோம், என்றார். போட்டித்தேர் வுகள் முடியும் வரை சனி மற்றும்  ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின் றன. அதனை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.