districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மகளிர் விடுதிக்குள் புகுந்து  போலி அதிகாரி மோசடி

கோவை, பிப்.10- கோவையில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து  விடுதியில் தங்கியிருந்த பெண்களை ஏமாற்றி மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.   கோவை - ஆர்.எஸ்.புரம், ராகவன் வீதியில்  மகளிர் விடுதி  செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான பெண்கள் தங்கி  இருந்து வேலைக்கு சென்று வருகின்றனர். கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு இந்த விடுதிக்கு ராமலட்சுமி (31)  என்பவர் வந்துள்ளார்.  அவர் விடுதி வார்டன் கார்த்தி யாயினி (65) என்பவரிடம், தன்னை  மதுரை- அண்ணாநகரை சேர்ந்தவர் என்றும், வருமானவரித் துறை அதிகாரி என கூறி   ஆவணங்களை காட்டி உள்ளார். தற்போது ஐஏஎஸ்  பயிற்சி வகுப்பு சென்று வருவதாக தெரிவித்தார். இதை யடுத்து விடுதியில் தாங்கி உள்ளார்.  இந்நிலையில், விடுதியில் தங்கி உள்ள சில பெண்களிடம்  அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும், விடுதி  பெண்களிடம், அவசர வேலைக்கு லேப்டாப் தேவைப்படு வதாக கூறி 2 லேப்டாப்பும், ரூ.30 ஆயிரம் பணமும் வாங்கி யுள்ளார். பின்னர் விடுதிக்கு வரவில்லை.  இதுகுறித்து விடுதி பெண்கள், விடுதி வார்டனிடம் தெரி வித்தனர். இது குறித்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில்  புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், ராமலட்சுமி வருமான வரித்துறை அதிகாரி என போலி ஆவணங்களை காட்டி உள்ளார் என தெரியவந்தது.  இதனையடுத்து போலீசார், கோவையில் உள்ள அவரது  தோழி வீட்டில் தலைமறைவாக இருந்த ராமலட்சுமியை கைது  செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தருமபுரி, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் வெவ்வேறு பெயர்களில் மோசடி செய்தது தெரியவந்தது. பின்னர் ராமலட்சுமி நீதிமன்றத்தில் முன் நிறுத்தப்பட்டு  கோவை சிறையில் அடைக்கப்பட்டார். 

கோவை: ஆட்டோவில்  பயணிக்க  செயலி அறிமுகம்

கோவை, பிப்.10- கோவை ரயில் நிலையத்தி லிருந்து ஆட்டோவில் பயணிக்க  செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.   தமிழ்நாட்டின் முதன் முறையாக கோவை ரயில்நிலையத்தில் வாட்ஸ்  ஆப் மற்றும் ஸ்கேன் கோர்டு வாயி லாக  ஆட்டோ புக் செய்யும் வசதி  அறிமுகம் செய்யப்பட்டது. கோவை ரயில் நிலைய சந்திப்பில் செயலி  வழியே ஆட்டோ  புக் செய்யக்கூடிய வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான பணிகளை சேலம் கோட் டத்தை சேர்ந்த வணிகப்பிரிவு அதி காரிகள் எடுத்து வந்த நிலையில், கோவையில் செயல்பட்டு வரும் ஊர்  கேப்ஸ் நிறுவனம் இதற்கான ஆணை யைப் பெற்றுள்ளது.  கோவை ரயில் நிலையத்தின் பின் புறம் உள்ள இரண்டாவது நுழை வாயிலில் இந்த சேவைக்கான கவுண் டர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த  சேவை மூலம் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும் பயணிகள் தங்களுக் கான ஆட்டோவை பேரம் பேசாமல் பயணிக்க இயலும். முன்னதாக, இச்சேவையை தெற்கு ரயில்வேயின் முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் (சேலம் கோட்டம்)  ஹரிகிரிஷ்ணன் துவக்கி  வைத்தார். ஊர் கேப்ஸ் தலைமை செயல் அதிகாரி மரிய ஆண்டணி உட னிருந்தார்.

அணை நிலவரம் 

திருமூர்த்தி அணை நீர்மட்டம்:44.07/60அடி நீர்வரத்து:815கன அடி அமராவதி அணை நீர்மட்டம்:69.62/90அடி.நீர்வரத்து:116கனஅடி வெளியேற்றம்:782கனஅடி

எரிபொருள் ஏற்றிச்சென்ற லாரி சாலையில் கவிழ்ந்தது

பள்ளிபாளையம், பிப்.10- கோவை நோக்கி 40 ஆயிரம் கொள் ளளவு கொண்ட பெட்ரோலின் மூலப் பொருளான எத்தனால் எரிபொருள் ஏற்றி வந்த டேங்கர் லாரி குமாரபாளை யம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கர்நாடகா மாநிலம், வெல்கம் மாவட் டத்திலிருந்து பெட்ரோலிய மூலப் பொருளான எத்தனால், எரிபொருளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கோவை  நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை ஓட்டுநர் சுப்பிரமணி என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் நாமக் கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள பச்சாம்பாளையம் தேசிய நெடுஞ் சாலையில் வந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோ ரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இதையடுத்து, சங்ககிரி, வெப்படை தீயணைப்பு நிலையங்களில் இருந்து  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இவ்விபத்து குறித்து வெப்படை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விபத்தால், சுமார் 2  கிலோ மீட்டர் தொலைவு வரை போக்கு வரத்து தடை செய்யப்பட்டது. இதைய டுத்து ஜேசிபி உள்ளிட்ட இயந்திரம் உத வியுடன் கவிழ்ந்த தூக்கப்பட்டு, கோவை நோக்கி பாதுகாப்பாக சென்றது.

வேலைவாய்ப்பு திருவிழா 50 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க ஏற்பாடு

திருப்பூர், பிப்.10- திருப்பூர் மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு திருவிழா  - 2023 சிக்கண்ணா அரசு கலைக்கல்லுரியில், சனிக்கிழமை  (இன்று) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் வேலை வழங்கக்கூடிய 550  சிறு மற்றும்  குறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளது.  50 ஆயிரத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் வழங்கப் பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. முகாம்  நடைபெறும் இடத்தில் வேலை நாடுவோர் தங்கு தடையின்றி  நிறுவனங்களை சந்திக்கும் வகையில் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு உள்ளது. வேலை நாடுவோர் முறையான பதிவுக்கு பின் வழங்கப்ப டும் அடையாள அட்டையைக் கொண்டு இம்முகாமில் வேலை  வாய்ப்பு வழங்கும் நிறுவனங்களை சந்திக்கலாம். வேலை  வழங்கும் நிறுவனங்களுக்கு அறை எண் மற்றும் நிறுவனத் தின் பெயர் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள் ளது. தேவையான குடிநீர், கழிவறை, உணவுக்கூடம் போன்ற  அடிப்படை வசதிகளுடன் முகாம் நடைபெறும் இடம் அமைக் கப்பட்டுள்ளது. இம்முகாமில் மகளிர் திட்டம் சார்பில் 650 நபர்கள், காவல் துறை சார்பில் 300 நபர்கள், போக்குவரத்து காவல்துறை சார் பில் 50 நபர்கள், சுகாதார துறை சார்பில் 30 மருத்துவர்கள் மற் றும் செவிலியர்கள், கோவை, நீலகிரி, சேலம், கரூர், ஈரோடு  மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சார்ந்த 70 வேலை வாய்ப்பு  துறை அலுவலர்கள், 12 தீயணைப்பு துறை அலுவலர்கள், 15  மின்வாரிய அலுவலர்கள், 500 மாநகராட்சி சார்ந்த அலுவலர் கள் மற்றும் பணியாளர்கள், தன்னார்வலர்கள், நாட்டு நலப்ப ணித்திட்ட மாணவ, மாணவியர்கள், கல்லுரி மாணவ, மாணவி யர்கள் 500 பேர் என  மொத்தம் 3,500க்கும் மேற்பட்ட அலுவ லர்கள், மருத்துவர்கள், பணியாளர்கள், செவிலியர்கள், பொறியாளர்கள், காவல் துறையினர் மற்றும் தூய்மை பணி யாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இம்முகாமில் வேலை நாடுவோர் அனைவருக்கும் முகாமில் பங்குபெறும் ”தனியார் நிறுவங்களின் தகவல் கையேடு” வழங்கப்படும். இந்த முகாம் மாவட்ட ஆட்சியர்  எஸ்.வினீத் தலைமையில்,  மாநில நகராட்சி நிர்வாகத் துறை  அமைச்சர் கே.என்.நேரு, செய்தித்துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட் டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று துவக்கி வைக்கின்றனர். இந்த வேலை வாய்ப்பு திருவிழாவில் இளைஞர்கள் பங் கெடுத்து கொண்டு பணி வாய்ப்பு பெற்று பயன் பெறு மாறு திருப்பூர் மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.

பேன்சி கடையில் சிரஞ்ச் விற்பனை அரசு மருத்துவமனையில் சிரஞ்ச் தட்டுப்பாடா?

திருப்பூர், பிப்.10- வேலம்பாளையம்  மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தில் சிகிச்சைக்காக வரும்  நோயாளிகளிடம் அருகில் இருக்கும் பேன்சி கடையில் சிரஞ்ச் வாங்கி வரும் படி கூறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருப்பூர், 15 வேலம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிக ளில் தெரு நாய்கள் தொல்லையால் பல பேர்  பாதிக்கப்பட்டு  வருகின்றனர். இதையடுத்து தெருநாய்களை கட்டுப்படுத்த அப்பகுதி பொதுமக்களுடன், மார்க்ஸ்சிட் கட்சியினர் மாநக ராட்சி அலுவலகத்தில் கடந்த வாரம் மனு அளித்தனர். இந்நி லையில் தெரு நாய்களிடம் கடிபட்டு வேலம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக வருபவர்க ளிடம் செவிலியர்கள் அருகாமையில் உள்ள பேன்சி கடையில்  சிரஞ்ச் வாங்கி வரும்படி கூறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள் ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவிக்கையில், கடந்த மாதம் என்னை தெருநாய் கடித்தது. இதையடுத்து இரண்டாம் தவணை தடுப்பு ஊசி போட வேலம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக வந்தேன்.  என்னிடம் அருகாமையில் உள்ள பேன்சி கடையில் சிரஞ்ச்  வாங்கி வரும்படி தெரிவித்தனர். அரசு மருத்துவமனையை நம்பி வரும் ஏழை எளிய மக்களை வெளியில் சென்று சிரஞ்ச்  வாங்கி வரும்படி அலைக்கழிப்பது ஏற்புடையதல்ல, மேலும்  பேன்சி கடையில்  சிரஞ்சுகள் வாங்கி பயன்படுத்துவதால் சுகா தார பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே அரசு   தலையிட்டு மருத்துவமனையிலேயே சிரஞ்ச் கிடைக்க நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

அணைகளின் நிலவரம்

அணைகளின் நிலவரம்  திருமூர்த்தி அணை நீர்மட்டம்:44.07/60அடி நீர்வரத்து:815கன அடி வெளியேற்றம்:1093கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்:69.62/90அடி.நீர்வரத்து:116கனஅடி வெளியேற்றம்:782கனஅடி

சிறப்பு ஆதார் முகாம்

திருப்பூர், பிப்.10- பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி சமுதாய நலக்கூடத்தில் பல்லடம் தபால் அலுவலகம் மற் றும் பணிக்கம்பட்டி தபால்  அலுவலகம் ஆகியவை இணைந்து நடத்திய சிறப்பு  ஆதார் முகாம் நடைபெற் றது. இதில் திரளானோர் கலந்துகொண்டு குழந்தை களுக்கு புதிதாக ஆதார் எடுத் தனர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பிப்.24, 25-ல் முதல்வர் பிரச்சாரம்

வர் பிரச்சாரம் ஈரோடு, பிப்.10- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங் கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க பிப்.24, 25 ஆகிய தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடு பட உள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ்  கட்சியின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக திமுக, சிபிஎம் உள்ளிட்ட கூட்டணி  கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்ற னர்.  இதன்தொடர்ச்சியாக, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிப்.24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.  முதல் நாளில் (பிப்.24) நாச்சாயி டீக்கடை, பெரிய வலசு, அக்ரஹாரம் வண்டிப்பேட்டை, கேஎன்கே சாலை உள்ளிட்ட பகுதிகளிலும், பிப்.25 ஆம் தேதி ஜெகநாதபுரம் காலனி, சூரம் பட்டி நால்ரோடு, மரப்பாலம், சின்ன மாரியம்மன் கோவில்  மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் பிரச்சாரத்தில் ஈடு பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியர் அலுவலகத்தில் திருட்டு 

நாமக்கல், பிப்.10- நாமக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் அறையிலிருந்து மடிக்கணினி திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பின் புறத்தில் இருக்கும் இணைப்பு கட்டிடத்தில் அறை எண்: 27-ல் எல்காட் அலுவலக சேமிப்பு அறை உள்ளது. அதில் 15 மடிக் கணினிகள், 15 மானிட்டர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந் நிலையில், சேமிப்பு அறைக்கு ஆபரேட்டர் அனிதா என்பவர் சென்றுள்ளார். அப்போது ரூ.2.97 லட்சம் மதிப்பிலான 14 மடிக்கணினிகள் மற்றும் 15 மானிட்டர்கள் காணாமல் போய்  இருந்துள்ளது. இதுகுறித்து எல்காட் ஆதார் ஒருங்கிணைப் பாளர் லோகநாதன் நல்லிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் குமர வேல் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னார். இதில், சமூக நல அலுவலக உதவியாளர் சுரேஷ் (34)  என்பவர் மடிக்கணினிகள் மற்றும் மானிட்டர்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுரேஷை கைது  செய்து, மடிக்கணினிகள் மற்றும் மானிட்டர்களை பறிமுதல் செய்தனர்.

பாஜக கூடாரம் காலியாகிறது

ஈரோடு, பிப்.10- பாஜவிலிருந்து விலகி திமுகவில் இணைவோரின் எண் ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதால் அதன் கூடா ரம் காலியாகி வருகிறது. ஈரோட்டில், பாஜக பட்டியலின பிரிவு மாநில பொதுச்செய லாளராக செயல்பட்டு வந்தவர் விநாயகமூர்த்தி. அவர் அக் கட்சியில் இருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னி லையில் திமுகவில் சமீபத்தில் இணைந்தார். பாஜக தொழிற் சங்க நிர்வாகியான சீனிவாசன் என்பவர் கடந்த சில நாட்க ளுக்கு முன் அமைச்சர்கள் எ.வ.வேலு, சு.முத்துசாமி, செந்தில் பாலாஜி ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந் தார். இந்நிலையில், அசோகபுரத்தில் இருந்த பாஜகவினர்,  திமுகவில் இணையும் விழா அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர்கள்  கே.என்.நேரு, சு.முத்துசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகி யோர் முன்னிலையில் 600க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். ஈரோடு மாவட்டத் தில் பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைவோர் எண் ணிக்கை அதிகரித்து வருவதால், பாஜகவின் தலைமை அதிர்ந்துள்ளது.

கூட்டத்தை சமாளிக்கவே வாக்குறுதி

சுவரொட்டியை கிழித்த வட்டாட்சியர்: சிபிஎம் ஆவேசம்

சேலம், பிப்.10- மக்கள் கோரிக்கைகளை பட்டியலிட்ட சுவரொட்டியை கிழித்தெறியும் ஓமலூர் வட் டாட்சியரை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதி மக்க ளின் அடிப்படை பிரச்சனைகளுக்காக மார்க் சிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் அறிவிப்பு  சுவரொட்டிகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருந் தது. அதனை ஓமலூர் வட்டாட்சியர் வல்ல  முனியப்பன் கிழித்தெறிந்துள்ளார். அரசின்  கவனத்திற்கு கோரிக்கைகளை கொண்டு  செல்ல சுவரொட்டியை ஒட்டினால், இக்கோரிக் கைகளை நிறைவேற்ற வேண்டிய இடத்தில் உள்ள அதிகாரி அதனை செய்யாமல் சுவ ரொட்டியை கிழித்தெறிந்தது, பூனை கண் மூடி னால் உலகம் இருட்டு என்கிற கதையாக  வட்டாட்சியர் செயல்பாடு உள்ளது என மார்க் சிஸ்ட் கட்சியினர் விமர்சித்துள்ளனர். மேலும் ஓமலூர், காடையாம்பட்டி தாலுகாவிற்கு தனி கோட்டாட்சியர் அலுவலகம் திறக்க வேண் டும். காடையாம்பட்டி பகுதிக்கு தனி பத்திரப் பதிவு அலுவலகம் திறக்க வேண்டும். சிவில், ஜீவனாம்சம் குற்ற வழக்கு நடவடிக்கைக்கு ஒருங்கிணைந்த கீழமை நீதிமன்றம் அமைக்க வேண்டும். காந்தி நகர், காமலாபுரம், குண் டூர், தும்பிபாடி, ஆண்டிப்பட்டி, பொட்டியா புரம் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சி யின் தாலுகா செயலாளர் என்.ஈஸ்வரன் தலைமை வகித்தார். இதில் சிபிஎம் மாநில  செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங், மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, தாலுகா குழு உறுப்பினர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.