districts

img

தேயிலை தொழிலாளர்கள் வேலை இழக்கமாட்டார்கள்

உதகை, நவ.11- எந்த காரணத்தினாலும் ‌தோட்டத்‌ தொழிலாளர்கள்‌வேலை இழக்க மாட்டார்கள் என உதகையில் நடை பெற்ற டான் டீ சங்க நிர்வாகிகள் கூட் டத்தில், தமிழக வனத்துறை அமைச்சர்  கா.ராமச்சந்திரன் உறுதியளித்துள் ளார். நீலகிரி மாவட்டம், உதகையி லுள்ள தமிழக அரசு விருந்தினர் மாளி கையில் வனத்துறை அமைச்சர் கா. ராமசந்திரன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் தலை மையில் டான் டீ சங்கத்தின் நிர்வாகி களுடன் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அப்பாஸ்‌, நீலகிரி மாவட்ட ஆட்சியர்  சா.ப.அம்ரித்‌, தமிழ்நாடு தேயிலைத் ‌தோட்டக் ‌கழகத்தின் ‌(டான்டீ) சார்பில்‌ மேலாண்மை இயக்குநர் மஞ்சுநாதா‌, முதுமலை புலிகள் காப்பக கள இயக் குநர் டி.வெங்கடேஷ், மாவட்ட  வருவாய்‌ அலுவலர் கீர்த்தி பிரிய தர்ஷினி மற்றும்‌ தொழிற்சங்கங்கள்‌ சார்பாக டி.கே.மாடசாமி (எல்பிஎப்), பெரியசாமி (ஏஐடியுசி), ஆர்‌.சந்திர குமார் (சிஐடியு), சி.யோகநாதன் ‌(ஐஎன்டியுசி), கே.எம்‌.ஏ.சுப்ரமணியம் (பிடபிள்யூயுசி) ஆகியோர் பங்கேற் றனர்.

இக்கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் பேசு கையில், உலக மயமாக்குத்‌ கொள்கை யினால்‌ இந்திய‌ தேயிலைச் சந்தையில்‌ ஏற்பட்ட விலை வீழ்ச்சியினாலும்‌,  கடந்த சில ஆண்டுகளாக நிதி பற்றாக் குறை நிலவியதன் காரணமாக தேயிலை செடிகளை உரிய முறையில்‌ பராமரிக்க இயலாததாலும்‌, உரங்கள்‌ மற்றும்‌வேதி இடுபொருட்களின்‌விலை அதிகரித்ததாலும்‌, இக்கழகத்தில் ‌பணிபுரிந்து வந்த தொழிலாளர் களின்‌ குடும்பங்கள்‌ கல்வி மற்றும்‌ பொருளாதார மேம்பாடு அடைந்த காரணத்தினால்‌ தொழிலாளர்‌ பற்றாக் குறை‌, தேயிலை அறுவடை இலக்கை  எட்ட முடியாமல்‌ டான்டீ தொடர்‌ நஷ்டத்தை சந்தித்து வருகிறது. உபாசியின்‌ விதிமுறைகளின்படி, தற்போதுள்ள நிரந்தர மற்றும்‌ தற் காலிக தொழிலாளர்களின்‌ எண்ணிக் கையை கொண்டு இருக்கும் தேயிலை  நிலப்பரப்பை பராமரித்து பசுந் தேயிலை உற்பத்தி தொடர்ந்து நடை பெறும்‌. எக்காரணத்தை  கொண்டும் ‌தோட்டத்‌ தொழிலாளர்கள்‌ வேலை இழக்க மாட்டார்கள்‌.

நிதி நெருக்கடியிலும்‌ 2016 ஆம்‌ ஆண்டு முதல்‌ நிலுவையிலிருந்து வந்த தொழிலாளர்கள்‌ மற்றும்‌ ஊழியர் களின்‌ ஓய்வூதிய பணிக்கொடை, விடுப்பு  ஒப்புவிப்பு ஊதியம்‌, மருத்துவ ஊதியம்‌, ஊதியத்துடன்‌கூடிய விடுப்பு  ஊதியம்‌, கள மேற்பார்வையாளர் களின்‌ நிலுவை ஊதியம்‌ ஆகியவை விடுவிப்பதற்கான அரசாணை எண்‌.157  மூலமாக ரூ.29 கோடியே 38 லட்சம்‌  நிதி, அரசால்‌ ஒதுக்கப்பட்டு அனைத்து  தொகையும்‌ செப்டம்பர் முதல்‌ அக் டோபர் மாதம்‌வரை அனைவருக்கும்‌ வழங்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற பிறகும்‌ தேயிலை தோட்டக் கழகத் தின்‌ குடியிருப்பில்‌வசித்து வருவோ ருக்கும்‌, இந்த ஓய்வூதிய பலன்கள்‌ தொகை வழங்கப்பட்டன. தொழி லாளர்களுக்கு ஓய்வுக்கு பின்னர்‌ ஒரு பாதுகாப்பான வாழ்வு சூழலை அமைத்து தர அவர்களுக்கு வீடு வழங்க கோரி அரசுக்கு 2021ஆம் ஆண்டு கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி தற்போது முதற்கட்டமாக  72 ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தால்‌ மறுவாழ்வு திட்டத்தின்‌ வாயிலாக, கூடலூர்‌ பகுதி யில்‌ வீடுகள்‌ ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும்‌, ஓய்வு பெற்ற 677 தொழிலாளர் களுக்கு பணிக்கொடை மற்றும்‌ இதர  பணப்பலன்கள்‌ வழங்கப்பட்டும், இது வரை அவர்கள் இக்கழக குடியிருப் பினை காலி செய்யாமல்‌ தற்போதும்‌ குடியிருந்து வருகின்றனர்‌. முதல்வரின்  அறிவுறுத்தலின்படி, நகர்புற வாழ்விட  மேம்பாட்டு வாரியத்தின்‌ கீழ்‌ ஏற்கனவே  கட்டப்பட்டு வரும்‌ வீடுகளை பயனாளி களுக்கான உரிய பங்கு தொகையை செலுத்த இயல்பவர்கள் பெற்று பயன டையலாம்‌. இந்த பங்குத்தொகை செலுத்த இயலாதவர்கள்‌ நடுவட்டம்‌ மற்றும்‌ சேரங்கோடு பகுதியில்‌அரசு நிலத்தில்  தாமாக முன்வந்து வீடு கட்டும்‌ திட் டத்தின்‌ கீழ்‌ இலவச மனைபட்டாவும்‌, வீடு கட்ட மானியமாக தலா ரூ.2 லட்சத்து  10 ஆயிரம் வழங்க நடவடிக்கை உடனடி யாக மேற்கொள்ளப்படும்‌. மூன்றாவது  வாய்ப்பாக தங்கள்‌ விருப்பத்துக்கு ஏற்ப  தாங்களே வீடு கட்டி கொள்ள விரும்பு வோருக்கு இதே பகுதியில்‌ வீட்டுமனை  பட்டா இலவசமாக வழங்கவும் நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.