districts

img

ஒரே தோட்டத்திற்குள் 22 மயில்கள் இறப்பு வனத்துறை, போலீசார் விசாரணை

கோவை, அக்.20- கோவை, வடுகபாயைம் அருகே 22  மயில்கள் ஒரே தோட்டத்திற்குள் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இதுகுறித்து, வனத்துறை மற்றும் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், வதம்பச்சேரி அடுத்த வடுகபாளையம் காந்திநகர் பகுதியில் சண்முகராஜ், ராமசாமி மற்றும் கோபால்சாமி ஆகியோருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கொத்து கொத்தாக 22 மயில்கள்  இறந்து கிடந்தன. இதனை கண்ட ஆடு மேய்க்கும் பெண்மணி, தோட்டத்து உரிமையாளரிடம் தகவல் அளித்துள்ளார். இதையடுத்து, தோட் டத்து உரிமையாளர்கள், மயில்கள் இறந்து கிடப்பது குறித்து கிராம நிர்வா கத்திற்கும், சுல்தான்பேட்டை காவல்  நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை யினர் இறந்து கிடந்த மயில்களை மீட் டனர்.  தேசிய பறவையான மயில் இறந் தால் உடனடியாக வனத்துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது விதி. இதனிடையே இறந்த  மயில்களின் உடல்களை வனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உடற் கூறாய்விற்கு பிறகுதான் இறப்புக்கான  காரணம் குறித்து தெரியவரும். பிறகு தான் விசாரணை மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்தனர். ஒரே தோட்டத்திற்குள், கொத்துக் கொத்தாக 22 மயில்கள் இறந்து கிடந்த  சம்பவம் அப்பகுதியில் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.