districts

img

கிராமசபையில் தீர்வு காணப்படாததால் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

நாமக்கல், மே 2- கல் குவாரிகள் தொடர்பான பிரச்சனைக்கு கிராமசபை கூட்டத் தில் தீர்வு காணப்படாததால் உயர் அதிகாரிகள் வரும் வரை ஊர்மக் கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு வட்டம், எலச்சிபாளை யம் ஒன்றியம் கோக்கலை ஊராட்சி யில்  கருமாகவுண்டம் பாளையத் தில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் கந்தசாமி தலை மையில் நடைபெற்றது.  ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் கோக் கலை எளையாம்பாளையம் பகுதி யிலுள்ள கல் குவாரிகள் பிரச்சனை தொடர்பாக கடந்த இரண்டு ஆண்டு களுக்கு முன் நடந்த கிராமசபை கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானத் திற்கு தீர்வு என்ன எனக் கேட்டு ஊர்  பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். காலை 10 மணிக்கு தொடங்கி 11 மணிக்கு முடிய வேண்டிய கிராம சபை கூட்டம்  உரிய தீர்வு எட்டப் படாததால், உயர் அதிகாரிகள் வரும் வரை கூட்டத்திலிருந்து  செல்லமாட்டோம் எனக்கூறி ஊர்  மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து, தகவல் அறிந்த திருச்செங்கோடு வட்டாட்சியர் அப் பன்ராஜ் கூட்டம் நடக்கும் இடத் திற்கு வந்தார். இப்பிரச்சனை தொடர் பாக உரிய நடவடிக்கை எடுக்கப் படும். கிராம நிர்வாக அலுவலர் கிராமத்திலேயே இருந்து பணிபுரிய உத்தரவிடப்படும். ஒரு வார காலத் திற்குள் பொதுமக்களின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என உத்தரவாதம் அளித் ததைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.