districts

img

செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை

சேலம், ஏப்.16- செயற்கை முறையில் பழுக்க  வைக்கும் பழங்கள் கண்டறியப் பட்டால் வியாபாரிகள் மீது உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின்படி, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப் படும் என உணவு பாதுகாப்பு நிய மன அலுவலர் கதிரவன் எச்ச ரிக்கை விடுத்துள்ளார். முக்கனிகளில் முதன்மையான மாம்பழத்திற்கு பெயர் பெற்றது சேலம் மாவட்டம். கோடைகாலத் தில் மாம்பழங்கள் வரத்து அதிக ரிக்கும். இந்நிலையில், செயற்கை  முறையில் பழங்களை பழுக்க  வைக்கப்படுவதாக உணவு பாது காப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து உணவு பாதுகாப்பு நியமன அலு வலர் கதிரவன் தலைமையில், மாந கரில் பல்வேறு இடங்களில் உள்ள  மாம்பழ குடோன்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஒரு சில கடைகளில் ரசாயdத்தை  நேரடியாக பழத்தில் தெளிப்பதால்  செயற்கை முறையில் பழுக்க வைக் கப்பட்ட சுமார் 100 கிலோ பழங் கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தடுக்கும் வகையில் மாம் பழ மொத்த வியாபாரிகளுடன் ஆலோ சனை கூட்டம் தனியார் உணவு விடுதியில் நடைபெற்றது. அப் போது உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன், செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் பழங்களால் என்ன தீங்கு? என்பது  குறித்தும், இயற்கை முறைகளால் பழுக்க வைக்கப்படும் பழங்கள் நன்மை குறித்தும் எடுத்துரைத் தார். இதைத்தொடர்ந்து செய்தியா ளர்களிடம் அவர் கூறுகையில், சேலம் மாநகரை பொறுத்தவரை 25 மொத்த வியாபாரிகள் உள்ளனர். அவர்களுடன் ஆலோசனை மேற் கொள்ளப்பட்டது.

பொதுமக்கள் பழங்களை வாங்கும் போது பார்த்து வாங்க வேண்டும் என்றும், செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்களில் சுவை, மனம், நிறம் முற்றிலும் மாறுபட்டிருக்கும். மேலும், பழங்கள் மீது கருப்பு நிற வட்டம் காணப்படும். அதை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை என  கண்டறியலாம் எனவும் தெரிவித் தார். அவ்வாறு செயற்கை முறை யில் பழுக்க வைத்த பழங்களை உண்பதால் வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று எரிச்சல், கடைசி கட்டத்தில் புற்றுநோய் கூட வர நேரி டும். எனவே இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை மட்டுமே உண்ண வேண்டும் என் றும் அறிவுறுத்தினார். மேலும், எத்திப்பான் தெளிப்பு முறையில் (செயற்கை முறை) வியாபாரிகள் பழங்களை பழுக்க வைப்பது கண்டறியப்பட்டால், பழங்கள் பறிமுதல் செய்யப்படும். தொடர்ந்து அவர் மீது உணவு பாது காப்பு சட்டத்தின் படியும் குற்ற வியல் நடவடிக்கை மேற்கொள்ளப் படும் எனவும் தெரிவித்தார். அதே சமயம் செயற்கை முறையில் பழங் களை பழுக்க வைப்பது கண்டறிந் தால், பொதுமக்கள் சம்பந்தப் பட்ட உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வும் கதிரவன் கேட்டுக்கொண்டார்.