districts

img

ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக வழங்கு நாட்டுப்புறக் கலைஞர்கள் கோரிக்கை

தருமபுரி, ஜன.10- நலிந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஓய்வூதியம் ரூ3  ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு நாடகம் மற்றும்  நாட்டுப்புறக் கலைஞர்கள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளது.  தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் நலச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் செவ்வாயன்று தருமபுரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நிறுவன தலைவர்  எஸ்.தங்கவேல் தலைமை வகித்தார். பின்னர்,தமிழ்நாடு  அரசு வழங்கப்படும் கலைமாமணி விருதை தகுதி வாய்ந்த  நாட்டுப்புற கலைஞர்களுக்கு மாவட்ட அளவில் மூன்று  பேருக்கு வழங்க வேண்டும். நலிந்த நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை  ரூ.3 ஆயிர மாக உயர்த்தி வழங்க வேண்டும். அரசு நடத்தும்  கலை நிகழ்ச்சிகளில்   அனைத்து தகுதிவாய்ந்த கலைஞர்கள் மற்றும்  கலைக்குழுக்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். கலைப் பண்பாட்டுதுறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் தனி அலுவலரை நியமித்து வாரிய பணிகளை செயல் படுத்தவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. இதில், சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.