ஈரோடு, ஏப்.1- ஈரோடு மாநகராட்சியில் நிதி நிலை அறிக் கையை வெள்ளியன்று மாலை நடைபெற்ற மாமன்ற அவசர கூட்டத்தில் தாக்கல் செய்யப் பட்டது. ஈரோடு மாநகராட்சியின் புதிய ஆணை யாளராக ஜானகி ரவீந்திரன் வெள்ளியன்று பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து மாமன்ற அவசர கூட்டம் மாலையில் நடை பெற்றது. இதில் மேயர் சு.நாகரத்தினம், துணை மேயர், ஆணையாளர், பொறியாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண் டனர். நிதி குழு தலைவர் நிதி நிலை அறிக்கையை வாசித்தார். இதனைத் தொடர்ந்து மாமன்ற உறுப்பி னர்கள் பேசுகையில், கொசுப்புளு ஒழிப்பு பணியாளர்கள் பணி நீக்கத்தை ரத்து செய்து, அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என ஒரு மனதாக தீர்மானம் நிறை வேற்ற வேண்டும் வலியுறுத்தினர். டிபிசி பணி யாளர்களை மனித நேயத்துடன் பார்க்க வேண் டும். கொரோனா காலத்தில் அவர்கள் செய்த பணியை நன்றியுடன் பார்க்க வேண்டும் என கட்சி வித்தியாசம் இன்றி வலியுறுத்தினர். எல்டி தண்ணீர் பிரச்சனையை மாமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற நாள் முதல் உள்ளது. இன்று வரை தீரவில்லை. இத னால் சூரம்பட்டி, காசிபாளையம் பகு தியினர் பாதிக்கப்பட்டுள்ளனர். வரி உயர்வு செய்து வசூலும் செய்துள் ளோம். ஆனால் பொது நிதி என்று ஒரு பைசா கூட இல்லாத நிலையில் எந்த வேலை யையும் செய்ய முடியவில்லை. டெண்டர் எடுத்தவர்களிடம் கேட்டால் நிதி வரவில்லை என்கின்றனர். அதிகாரிகளிடம் நிதியை கொடுத்தால் வேலை நடக்காது என்கின் றனர். என்ன செய்வது என்ற கேள்வி எழுந் துள்ளது எனப்பல கேள்விகளை மாமன்ற உறுப்பினர்கள் எழுப்பினர்.