districts

img

சிகிச்சை பலனின்றி பெண் யானை உயிரிழப்பு

ஈரோடு,ஏப். 12- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி  நிலவுவதால் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டை, ஏரி வறண்டு போய் உள்ளது. இதனால் காட்டுயானைகள் தண் ணீர் மற்றும் உணவை தேடி அங்கும் இங்கும் அலைகின் றன. இந்நிலையில் வியாழனன்று சத்தியமங்கலம் புலிகள் காப்பக பண்ணாரி வனப்பகுதியில் புதுக்குய்யனூர் என்ற  இடத்தில் வனத்துறையினர் ரோந்து சென்ற போது அடர்ந்த  வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய நிலையில் ஒரு பெண்  யானை படுத்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந் தது. அந்த யானையின் அருகே ஒரு குட்டி யானை சுற்றி சுற்றி  வந்து பிளறிக் கொண்டிருந்தது. இது குறித்து உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிக ளுக்கும் கால்நடை மருத்துவ குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சத்தியமங்கலம் புலிகள் காப்பாக துணை இயக்கு னர் குலால் யோகேஷ் மற்றும் கால்நடை மருத்துவர் சதாசி வம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பெண் யானையை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். முதலில் குட்டி யானையை தாய் யானையிடம் இருந்து  பிரித்து வனத்துறையினர் தனியாக அழைத்து சென்றனர். பின்னர் தாய் யானைக்கு முதலில் காது நரம்பு வழியாக குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. எனினும் அந்த யானையின் உடல்நிலை மோசமான நிலையில் இருந்தது. இதற்கு இடையே குட்டி யானையின் சத்தத்தை கேட்டு காட்டில் உள்ள  6 காட்டுயானைகள் கூட்டம் சம்பவ இடத்திற்கு வந்தது. காட்டு யானைகள் கூட்டத்தை கண்டதும் வனத்துறை யினர் மருத்துவக் குழுவினர் அங்கிருந்து சற்று விலகி இருந் தனர். பின்னர் அந்த யானை கூட்டத்துடன் அந்த குட்டி  யானையும் சென்றது. அதன் பின்னர் உயிருக்கு போராடி  கொண்டிருக்கும் யானையை காப்பாற்றும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அந்த பெண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. பின்பு காட்டு யானை கூட்டத்துடன் சென்ற குட்டி யானை யின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை சார்பாக 2  குழுக்கள் அமைக்கப்பட்டு குட்டி யானையின் நடமாட் டத்தை கண்காணித்து வருகின்றனர். கடந்த மாதம் பண்ணாரி கோவில் அருகே பெண் யானை  உயிரிழந்தது. இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடம்பூரில் ஒரு பெண் யானை உயிரிழந்தது. தற்போதும் ஒரு  பெண் யானை உயிரிழந்து குறிப்பிடத்தக்கது.