உடற்பயிற்சி கூடத்தில் கீழே விழுந்த மூத்த வழக்கறிஞர் மறைவு
திருப்பூரில் உடற்பயிற்சிக் கூடத்தில் தவறி கீழே விழுந்த மூத்த வழக்கறிஞர் ரவி, தலையில் காயம் ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் புதன்கிழமை உயிரிழந்தார். சாமக்கோடாங்கி ரவி என்ற பெய ரில் 25க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 50க்கும் மேற்பட்ட கவி தைகள் எழுதியுள்ளார். அவரது மறைவுக்கு திருப்பூர் மூத்த வழக்கறிஞர்கள், கலை இலக்கியத் துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ரயிலில் தீ விபத்து
திருப்பூர் , நவ.27- கேரள மாநிலம் கொல் லத்திலிருந்து ஆந்திரா மச்சி லிப்பட்டினம் செல்லும் சபரி மலை எக்ஸ்பிரஸ் ரயில் புத னன்று அதிகாலை 3 மணி அளவில் கொல்லத்திலி ருந்து கிளம்பியது. மதியம் 2:40 மணியளவில் வஞ்சிபா ளையம் அருகே ரயில் வந்த போது மாற்றுத்திறனாளிகள் பெட்டிக்கு அருகே புகை வெளியேறியதை அடுத்து, ரயில் உடனடியாக வஞ்சிபா ளையம் அருகே நிறுத்தப்பட் டது. இதில், மாற்றுத்திறனா ளிகள் பெட்டி அருகே சிறிய அளவிலான தீ விபத்து ஏற் பட்டிருந்தது தெரியவந்தது. ரயிலில் இருந்த தீயணைப் பான்கள் மூலம் தீ உடனடி யாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மாற்றுத்தி றனாளிகள் பெட்டியின் அருகே சக்கரம் மற்றும் பிரேக் இடையே இருந்த ரப் பர் உராய்ந்து தீப்பற்றி, அதி லிருந்து புகை வெளியேறி யது தெரிய வந்தது.