பென்னாகரம், மே 10- உணவு, தண்ணீரை தேடி ஒகே னக்கல் வனப்பகுதியில் சுற்றித் திரி யும் ஒற்றை யானையால் சுற்றுலா பய ணிகள், வாகன ஓட்டிகள் அச்சமடைந் துள்ளனர். தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் வனப்பகுதி தமிழக - கர்நாடக வனப் பகுதிகளை இணைக்கும் முக்கிய பகு தியாக உள்ளது. கோடை காலங்க ளில் தண்ணீர், உணவு தேடி ஒகே னக்கல் காவிரி ஆற்றுக்கு யானைகள் வருவது வழக்கம். தற்போது கர்நாடக மாநில வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால், அங்குள்ள யானைகள் கூட்டம் கூட்டமாக உணவு தண்ணீர் தேடி கர்நாடக - தமிழக எல்லைப் பகுதியான தேன்கனிக்கோட்டை, ஓசூர், சானமாவு பகுதியில் சுற்றி திரிகின்றன. இந்த யானைகள் அந்த பகுதிகளில் உள்ள விவசாய நிலங்க ளில் புகுந்து பயிர்களை சேதப்ப டுத்தி வருகின்றன. இந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத் துறையினர் தீவிர நடவடிக்கை மேற் கொண்டு வருகின்றனர். இருப்பினும், யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றி திரிந்து வருகின்றன. இந்நிலையில, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் அமைந்துள்ள முண் டச்சிபள்ளம் பகுதியில் ஒற்றை யானை உணவு மற்றும் தண்ணீரை தேடி சுற்றித் திரிகின்றது. இந்த யானையை வனப்பகுதி சாலை ஓரங்களில் உள்ள மரங்களின் கிளைகளை உடைத்தும், இலைகளை சாப்பிட்டு வருகின்றது. காலை, மாலை நேரங்களில் ஒகே னக்கல் - பென்னாகரம் சாலையை ஒற்றை யானை கடப்பதால், சுற்றுலா பயணிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ள னர். இதுகுறித்து சுற்றுலா பயணி கள் கூறுகையில், யானைகள் நட மாட்டத்தை வனத்துறையினர் தீவிர மாக கண்காணிக்க வேண்டும். யானை கள் ஊருக்குள் மற்றும் விவசாய நிலங்கள் புகுவதை தடுக்க வனப் பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும். யானைகளை மீண்டும் கர்நாடக வன பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள் ளனர்.