districts

img

விவசாய சங்க பேரவை கூட்டம்

உடுமலை, மார்ச் 17- அகில இந்திய விவசாய சங்கத்தின் 35 ஆவது மாநாடு விளக்க பேரவை கூட்டம் 17 ஆம் தேதி வெள்ளியன்று உடு மலை ஸ்டாலின் நிலையத்தில் நடைபெற்றது. விவசாய சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பாலதண் டபாணி தலைமையில் நடைபெற்ற  இந்த பேரவை கூட்டத் தில், விவசாய சங்கத்தின் மாநில மற்றும் அகில இந்திய மாநாட்டு முடிவுகளை விளக்கி மாநிலப் பொருளாளர்  கே.பி. பெருமாள் உரையாற்றினார். இதில் மாவட்ட செயலாளர்  ஆர்.குமார், மாவட்ட துணை  தலைவர்  பரமசிவம், உடுமலை ஒன்றிய தலைவர் ராஜகோ பால், குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர், மடத்துக்குளம்  தாலுகா தலைவர் முத்துசாமி, செயலாளர் ஈஸ்வரன், தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அருண்பிர காஷ் உட்பட குடிமங்கலம், மடத்துக்குளம், உடுமலை பகுதி  விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.