திருப்பூர், ஜூலை 7- குன்னத்தூர் மற்றும் ஊத்துக்குளி யில் உழவர் சந்தை அமைக்குமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஊத்துக் குளி தாலுகா மாநாடு கோரிக்கை விடுத் துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஊத்துக்குளி தாலுக்கா ஏழாவது மாநாடு பல்லகவுண்டன்பாளையம் சிஐடியு சங்க அலுவலகத்தில் தாலுக்கா தலை வர் சு.கோபாலகிருஷ்ணன் தலைமை யில் வியாழக்கிழமை நடைபெற்றது. தெ.முருகேசன் வரவேற்றார். விவசாயி கள் சங்க திருப்பூர் மாவட்ட துணை செய லாளர் எஸ்.வெங்கடாசலம் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி வேலை அறிக்கை முன்வைத்தார். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஜெ.கந்தசாமி, விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் க.பிரகாஷ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பின்னர் நடைபெற்ற புதிய நிர்வாகி கள் தேர்வில் தாலுகா தலைவராக ஆர். மணி என்ற சுப்பிரமணி, செயலாளராக எஸ்.கே.கொளந்தசாமி, பொருளாள ராக ம.சத்தியமூர்த்தி, துணைத்தலை வராக சு.கோபாலகிருஷ்ணன், துணைச் செயலாளராக இரா.ரவிக்குமார் உள் பட கமிட்டி உறுப்பினர்கள் 13 பேர் ஏகம னதாக தேர்வு செய்யப்பட்டனர். தெரு நாய் கடியால் பலியான ஆடு கள் மற்றும் கன்றுகளுக்கு உரிய இழப் பீடு வழங்கவும், வெறிநாய் தொல் லையை கட்டுப்படுத்தவும், மான் தொல் லையால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்கி, அவற்றை வனத்தில் விடவும், உயர்மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலம் பயிர்களுக்கு அரசாணை எண் 54/2020ன்படி 10 மடங்கு இழப்பீடு வழங்கவும் மின்வாரிய அதிகாரிகள் தொகை ஏதும் வழங்காமல் விவசாயி களை ஏமாற்றி திட்டப்பணிகளை நிறை வேற்ற முயற்சிப்பதை கண்டித்தும், குன் னத்தூர், ஊத்துக்குளியில் உழவர் சந்தை அமைக்கவும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. திருப்பூர் மாவட்ட செய லாளர் ஆர்.குமார் நிறைவுரை ஆற் றினார். தாலுக்கா துணை செயலாளர் ஆர்.மணி என்கிற சுப்பிரமணி நன்றி தெரிவித்தார்.