districts

img

விவசாயத்தை பாதிக்கும் காளான் உர தொழிற்சாலை; அப்புறப்படுத்த வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையம், ஜூன் 8- நீர், நிலம், காற்று என அனைத் தையும் மாசுபடுத்தி, விவசாயத்தை பாதிக்கும் காளான் உர உற்பத்தி தொழிற்சாலைகளை அப்புறப்ப டுத்த வேண்டும் என வலியுறுத்தி மேட்டுப்பாளையம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் பகுதியில் உள்ள மலை யடிவார கிராமங்களில் விவசாயமே முக்கிய வாழ்வாதாரமாக உள் ளது. வாழை, தென்னை, கரும்பு,  கறிவேப்பிலை, பாக்கு, சோளம், மஞ்சள், பல்வேறு ரக காய்கறி  மற்றும் மலர் சாகுபடி நடைபெற்று  வருகிறது. இங்கு தாசம்பாளை யம் மற்றும் இலுப்பநத்தம் கிரா மங்களில் தனியார் காளான் உர  உற்பத்தி தொழிற்சாலைகள் உள் ளது. இத்தொழிற்சாலைகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவ தோடு இங்கிருந்து வெளியேற்றப் படும் கழிவு நீர் நிலத்தையும் நிலத் தடி நீரையும் கடுமையாக மாசுப டுத்தி வருகிறது. விளை நிலங்க ளுக்கு மத்தியில் இயங்கி வரும் இந்த தொழிற்சாலைகளை அப்புற படுத்தக்கோரி விவசாயிகள் பல முறை அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், மேட்டுப்பாளை யம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு திரண்ட விவசாயிகள், கிரா மப்புறங்களில் சுகாதார சீர்கேட்டை உருவாக்கி, சுற்றுப்புற சூழலை யும், விவசாயத்தையும் பாதிக்க செய்யும் இந்த காளான் உர உற் பத்தி ஆலைகளை உடனடியாக அப்புறபடுத்த வலியுறுத்தி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்களது கோரிக்கை நிறைவேற் றப்படாவிட்டால் அடுத்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் மற்றும் ஆட்சியர் அலுவகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என தீர்மா னம் நிறைவேற்றி அம்மனுவினை வட்டாச்சியர் அலுவக அதிகாரியி டம் வழங்கினர்.