உதகை, டிச.7- உருளைக்கிழங்கிற்கு உரிய விலை கிடைப்பதால், நீலகிரி விவசாயிகள் அறுவடை பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவ சாயம் அதிகம் மேற்கொள்ளப்படுகி றது. இங்கு உருளைக்கிழங்கு, பீட்ரூட், பீன்ஸ், முட்டைகோஸ், முள்ளங்கி உட் பட பல்வேறு மலை காய்கறிகள் பயிரி டப்படுகிறது. எனினும் அதிகளவு உரு ளைக்கிழங்கு மற்றும் கேரட் பயிரிடப் படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உற் பத்தி செய்யப்படும் உருளைக்கிழங் கின் சுவை அதிகம் என்பதால், விலை அதிகமாக கிடைப்பது வாடிக்கை. இத னால், பிற மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அதிகளவு உருளைக் கிழங்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கர்நாடகா மாநிலம், கோலார் மற்றும் தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து அதிகளவு உருளைக்கிழங்கு மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. அதேபோல் கொடைக்கானல் பகுதியில் இருந்தும் உருளைக்கிழங்கு வரத்து உள்ளது. ஆனால், நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு விலை குறையாமல் இருந்து வருகிறது. தற்போது ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ.40 முதல் ரூ.50 வரை விலை போகி றது. இதனால் விவசாயிகளுக்கு லாப மும் கிடைத்து வருவதால், மாவட்டத் தில் அனைத்து பகுதிகளிலும் விவசாயி கள் உருளைக்கிழங்கு அறுவடையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.