districts

img

நதியில் கழிவுநீர் கலப்பதால் விளை நிலம் பாழ்

தருமபுரி, டிச.9- இரண்டாயிரம் ஏக்கர் நிலங் களுக்கு, மிகப்பெரிய நீராதாரமாக விளங்கிய சனத்குமார் நதி, தற் போது நதி கழிவுநீர் கால்வாயாக  மாறியுள்ளது. கழிவுநீர் கலப்ப தையும், ஆக்கிரமிப்புகளை அகற்றி  தூர்வாரும் பணியை விரைந்து துவங்க வேண்டும் என தமிழ்நாடு  விவசாயிகள் சங்கம் மற்றும் பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.  தருமபுரி நகரத்தின் வழியாக தென்பெண்ணையின் கிளை நதி யான சனத்குமார் நதி கால்வாய் செல் கிறது. வத்தல்மலை அடிவாரம்,  தின்னஅள்ளியில் தொடங்கி சோழ ராயன் ஏரி, அதியமான்கோட்டை ஏரி,  ஏமகுட்டியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள ஏரி, கிணறுகளில் நீர் ஆதாரத்தை வழங்கி வருகிறது.  சுமார் 42.84 கிலோ மீட்டர் பயணித்து,  கம்பைநல்லூர் அருகே கூடுதுறைப் பட்டியில் தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. கடந்த 1960ஆம் ஆண்டில் இந்த நதியானது ஆண்டு முழுவதும் தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், வறட்சியால் நீர்வரத்து குறைந்தது. மேலும், ஆக்கிரமிப்பு காரணமாக ஆற்றின் பயணம் சுருங்கியது. இத னால், மழைக்காலங்களில் மட்டும் தண்ணீர் செல்லும் நதியாக மாறியது. இந்நிலையில், தருமபுரி நகரத் தார் குடியிருப்புகளிலிருந்து வெளி யேற்றப்படும் கழிவுநீர் குழாய்கள் நேரடியாக இந்த ஆற்றில் கலக்கப் படுவதால், தண்ணீர் மாசடைந்து  நிறம் மாறியது. மேலும், குப்பைக் கழிவுகள், கட்டுமான கழிவுகள் கொட்டப்பட்டு, கழிவுநீர் ஓடையாக மாறி விட்டது.  தருமபுரி வட்டாரத்தில் உள்ள பல் வேறு ஊராட்சிகளில் சுமார் இரண்டாயிரம் ஏக்கர் நிலங்களுக்கு, மிகப்பெரிய நீராதாரமாக விளங்கிய  சனத்குமார் நதி, தற்போது நதி  கழிவுநீர் கால்வாயாக மாறியது.  இதனால் நிலத்தடி நீர் மாசுப்பட் டுள்ளது.

மேலும் கோடைக்காலத் தில் இந்த நதியின் நீரை மக்கள் பயன் படுத்தி வந்தனர். தற்போது சனத் குமார் நதி மாசடைந்து கருப்பு நிறத்தில் தண்ணீர் ஓடுகிறது. இத னால் விவசாயத்திற்கு இந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து தருமபுரி மாவட்ட  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் தலைவர்கள் கூறுகையில், சனத் குமார் நதி செல்லும் இடமெல்லாம் விவசாய பாசனத்திற்கு பயன் பட்டது. தற்போது தருமபுரி நகரத்தின்  கழிவுநீர், விசைத்தறி பட்டறையில் இருந்து வெளியேறும் சாய கழிவுநீர் நேரடியாக சனத்குமார் நதியில் கலப்பதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது‌. மேலும் தருமபுரி ஒன்றியம், குண்டலபட்டி பகுதியில் சனத்குமார் நதி செல்லும்  பகுதிகளில் நிலத்தடி குடிநீர் மாச டைந்துள்ளது. நதி ஆக்கிரமிக்கப் பட்டு குறுகி காணப்படுகிறது. சனத்குமார் நதி தூர்வார நிதி ஒதுக் கப்பட்டு பல ஆண்டுகளாகியும் பணி நடைபெறவில்லை. எனவே, கழிவுநீர் கலப்பதை தடுத்து, ஆக்கிர மிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும். துரித நடவடிக்கை இல்லையெனில் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். இதேபோன்று, அப்பகுதி விவசாயி களும், பொதுமக்களும், சனத்குமார்  நதியை தூர் வாரி நதியை மீட்க  வேண்டும் என வலியுறுத்தியுள் ளனர்.