districts

img

நாய்களால் ஆடுகள் உயிரிழப்பு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, செப்.30- சென்னிமலை பகுதியில் ஆடுகளைக் கொல்லும் நாய் களை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியத்திற்குட்பட்ட சிறுக்களஞ்சி, இச்சிபாளையம், தளவாய்பாளையம், கூத்தம் பாளையம், பாலதொழுவு ஆகிய கிராமங்களில் விவசாயி களின் தோட்டங்களில் மேயக்கூடிய ஆடுகளை நாய்கள் கடித்து கொன்று வருகின்றன. எனவே, ஆடுகளைக் கொல்லும் நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆடு களை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் திங்களன்று சிறுக்களஞ்சி, கரட்டுப்பாளை யத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் தாலு காக்குழு உறுப்பினர் எஸ்.பி.சுப்பிரமணி தலைமை வகித்தார். தாலுகாத் தலைவர் கே.குப்புசாமி, செயலாளர் வி.எஸ்.மணி யன், தென்னை விவசாயிகள் சங்க தலைவர் ஆர்.அர்ச்சுனன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். சிபிஎம் பெருந்துறை தாலுகாச் செயலாளர் பி.முத்துபழனி சாமி, ஊத்துக்குளி தாலுகாச் செயலாளர் எஸ்.கே.கொளந் தசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில், கே.ஆறுமுகம் நன்றி கூறினார்.