districts

img

ஏரி வறண்டதால் விவசாயிகள் கவலை

பள்ளிபாளையம், ஏப்.9- கோடை வெயிலால் ஏரிகள் வறண்டு வருவதால், அதனை நம்பியுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் - குமாரபாளையம் சாலையில் சில்லாங்காடு என்ற பகுதி அருகே ஏரி அமைந் துள்ளது. மழை காலத்தில் ஏரி முழுவதும் நிரம்பி பார்க்கவே ரம்யமாக காட்சியளிக்கும். தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால், ஏரியில் நீர்வரத்து வெகுவாக குறைந்து குட்டை போல் காணப்படுகிறது. மேலும், ஏரியிலிருந்து வெளி யேறும் நீர் அருகில் உள்ள விவசாயப் பகுதிகளுக்கு, பாசன தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது நீர் முற்றி லும் வற்றிவிட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ள னர். அதேசமயம் ஆடி மாதத்தில் தான் காவிரி ஆற்றில் தண் ணீர் திறக்கப்படும் என்பதால், விவசாய பணிகளுக்கு நீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.