ஈரோடு, மே 31- யானையால் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டத் திற்குட்பட்டது பர்கூர் மலை. இங்குள்ள கல்வாரை கிராமத்தில், விவசாயிகள் குச்சிக் கிழங்கு, தென்னை, வாழை பயிரிட்டுள்ளனர். யானைகள் அடிக்கடி உணவு தேடி வனத்தை விட்டு விளை நிலங்களுக்குள் வந்து விடு கின்றன. யானைகள் குச்சிக் கிழங்கினை பிடுங்கி உண்பதும், சேதப்படுத்துவதும் தொடர்கிறது. இவ்வாறு ஒரு முறை வரும் போது சுமார் 20 சென்ட் அளவிலான விளை நிலங்கள் சேதமடைகிறது. தென்னை மற்றும் வாழை மரங்களையும் யானைகள் விட்டு வைப்பதில்லை. இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. இதனால் அச்சத்திலும், வேதனையிலும் அப்பகுதி விவசாயிகள் உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர், வனத்துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்களிடம் தெரி வித்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.வி.மாரிமுத்து வலியுறுத்தி உள்ளார்..