districts

img

விவசாயிகள் கண்டுணர்வு பயணம்

இளம்பிள்ளை, ஜன.28- பந்தல் முறையில் விவசாயம் குறித்து மகுடஞ்சாவடி விவசாயிகள் கண்டுணர்வு பயணம் மேற்கொண்டனர். சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை -  அட்மா திட்டத்தின் கீழ் உள் மாவட்ட அளவிலான கண்டு ணர்வு சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்பட்டு வருகின்ற னர். அதன்படி பந்தல் முறையில் காய்கறி பயிர் சாகுபடி என்ற தலைப்பில் 50 விவசாயிகள் பூலாம்பட்டி வருவாய் கிராமத்திலுள்ள பாரக்காடு பகுதியில் உள்ள பந்தல் பண் ணையை பார்வையிட அழைத்துச் செல்லப்பட்டனர். வேளாண்மை உதவி இயக்குனர் மு.தமிழ்செல்வன், பயிற்சி  செல்லும் விவசாயிகளுக்கு முகக்கவசம் வழங்கி, கொடி யசைத்து துவக்கி வைத்தார். பந்தல் முறையில் பீர்க்கங் காய் பயிரிடுதல், நிலப்போர்வை அமைத்தல், மஞ்சள் விளக் குப்பொறி வைத்தல், சொட்டுநீர் பாசனம் மூலம் உர மேலாண்மை, நீர் மேலாண்மை குறித்த தொழில் நுட்பங் களை அறிந்தனர். இந்த சுற்றுலாவில் கலந்து கொண்ட விவ சாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.