districts

img

நல்லம்பள்ளி வாரச்சந்தையில் கூடுதல் கட்டணம் வசூல்?

தருமபுரி, ஜன.21- நல்லம்பள்ளி வாரச்சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் குத்தகைதாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ள னர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் வாரந் தோறும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த வார சந்தையில் வீட்டிற்கு தேவை யான பொருட்கள், காய்கறிகள், மளிகை பொருட்கள் மற்றும் ஆடு, கோழிகளை வாங்குவதற்காக நல்லபள் ளியை சுற்றி உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட கிரா மங்களில் இருந்து பொதுமக்கள் வருகின்றனர்.  இந்நிலையில், வாரச்சந்தை குத்தகைதாரர் ஒரு ஆட்டிற்கு 10 ரூபாய் வாங்குவதற்கு பதிலாக 50 ரூபாய் என வசூலிக்கிறார். மேலும், சந்தையில் வைக் கப்படும் கடைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக குத்தகைதாரர் வசூல் செய்வதாக வியா பாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே, அரசு நிர்ண யித்த விலையை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய் பவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டுமென வியாபாரிகள் மற்றும் விவசாயி கள் வலியுறுத்தியுள்ளனர்.