சேலம் ஜூன் 29- ஊழல் புகாரில் சிக்கி கைது செய்யப்பட்ட சேலம் பெரியார் பல் கலைக்கழக துணைவேந்தர் ஜெக நாதனின் பதவிக்காலத்தை நீடிப்பு செய்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சேலம் மாவட்ட செயற்குழு கூட்டம், கட்சியின் மாவட்டக்குழு அலுவலகமான சிறை தியாகிகள் நினைவகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜெகநாதனின் பதவிக் காலத்தை தமிழக ஆளுநர் நீட்டிப்பு செய்ததற்கு மாவட்டக்குழு சார்பில் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக கட்சியின் மாவட் டச் செயலாளர் மேவை.சண்முக ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட் டிலுள்ள பல்கலைக்கழகங்களில் சர்ச்சைகளுக்கும், ஊழலுக்கும் பெயர்போனதாக சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மாறியுள்ளது. இந்த பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள் ளதால், அவருக்கு பணி நீட்டிப்பை வழங்கக்கூடாது என்றும், அவர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை களை அரசு எடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் கள் சங்கம், பணியாளர்கள் சங்கம், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல் வேறு அரசியல் கட்சிகள் வலி யுறுத்தி வருகின்றன. இந்நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜெகநாதனின் பதவிக்கா லத்தை வரும் 2025 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி வரை நீட்டித்து, தமிழக ஆளுநரும், பல்கலைக்க ழக வேந்தருமான ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். மேலும், அதற் கான ஆணையை துணைவேந்தர் ஆளுநரை நேரில் சந்தித்துப் பெற்றுக் கொண்டார். துணை வேந்தர் ஜெகநாதனின் பதவிக்கா லத்தை நீட்டிக்க அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தமிழக ஆளுநரின் தன்னிச்சையான இந்த செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக் குழு கடும் கண்டனத்தை தெரி வித்து கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட துணை வேந்தர் ஜெகநாதனை மீண்டும் பதவி நீட்டிப்பு செய்த ஆளுநரின் நடவடிக்கைக்கு, பல்கலை கழக பேராசிரியர்கள் சங்கம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இந்த தகவல் பரவிய நிலையிலேயே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.