districts

img

ரூ.30 லட்சம் கடனுக்கு ரூ.4 கோடி நிலம் அபகரிப்பு

கோவை, மே 31- 30 லட்சம் ரூபாய் கடனுக்காக, ரூ.4  கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை  அபகரிக்க தனியார் நிதிநிறுவனம் முயற்சிப்பதாக முதியவர் ஒருவர்  கோவை மாவட்ட காவல் கண்காணிப் பாளரிடம் மனு அளித்தார்.  கோவை ஆலாந்துறை அடுத்த போளுவாம்பட்டி பகுதியைச் சேர்ந்த வர் வெள்ளிங்கிரி. 98 வயதான இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும்  இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலை யில், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு  தனக்கு சொந்தமான சுமார் இரண்டரை ஏக்கர் நிலத்தின் பெயரில் வங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகைக்காக வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதை அடுத்து வங்கியில் இருந்து தனது நிலத்தை மீட்பதற்காக கரூரைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்ற  பைனான்சியரிடம் 30 லட்சம் ரூபாய் கடன் கேட்டு உள்ளார். அந்த கடன் தொகைக்கு அடமானமாக நிலத்தை அவர் கேட்டதை அடுத்து, அதற்கு ஒப் புக் கொண்ட வெள்ளியங்கிரி மற்றும் அவரது மகன், மகள்கள் பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு சென்று அட மான பத்திரம் என நினைத்து கையெ ழுத்து போட்டுக் கொடுத்து உள்ளனர். மேலும், அந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்த வெள்ளிங்கிரி குடும்பத்தி னர் அதில் சோளம் பயிரிட்டு இருந்த  சூழலில், அங்கு சென்ற ஈஸ்வரமூர்த்தி யின் மகனான அபிஷேக் மற்றும் அடை யாளம் தெரியாத 10 நபர்கள் அந்த நிலத்தை சுற்றி கம்பி வேலி அமைக்கும் பணியை துவங்கி உள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வெள்ளிங்கிரி குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு அவர்களை அச்சுறுத்தி அங்கு இருந்து அப்புறப் படுத்திய அந்த கும்பல், அங்கு பயிரி டப்பட்டு இருந்த சோளம் பயிர்களை ஜே.சி.பி இயந்திரம் கொண்டு அழிக்க துவங்கி உள்ளனர். இதை அடுத்து வெள்ளிங்கிரி மற்றும் அவரது குடும்பத்தினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் சந்தித்து புகார் அளித்தனர்.  இதுகுறித்து வெள்ளிங்கிரியின் வழக்கறிஞர் கூறுகையில், அடமானம் என்ற பெயரில், படிப்பறிவு இல்லாத வெள்ளிங்கிரி மற்றும் அவரது குடும் பத்தினரை ஏமாற்றி, 4கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வெறும் ரூ.30  லட்சத்துக்கு கிரயம் செய்து மோசடி யில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டாக இதுகுறித்து எந்த தகவலும் அறியாமல் இருந்த வெள்ளிங்கிரி மற்றும் குடும்பத்தினருக்கு, 10க்கும் மேற்பட்டோர் வந்து நிலத்தை அபக ரிக்கும் போது தான், அவர்கள் ஏமாற் றப்பட்டதை உணர்ந்துள்ளனர். இந்நி லையில், நில மோசடியில் ஈடுபட்ட பைனான்சியர் ஈஸ்வரமூர்த்தி, அவரது  மகன் அபிஷேக் மற்றும் அராஜகத் தில் ஈடுபட்ட அடியாட்கள் 10 பேர் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள் ளதாக தெரிவித்தார்.