கோவை, ஆக. 6- மனித - விலங்கு மோதலை கட்டுப்படுத்த ஸ்மார்ட் விர்ச்சு வல் வேலி அமைக்கப்பட்டுள்ள இடங்களில் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் செவ்வாயன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வகச்சரகங்களில் மனித-விலங்கு மோதலை கட்டுப்படுத்த ஸ்மார்ட் விர்ச் சுவல் வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் பார்கவ் தேஜா இந்த இடங்களை ஆய்வு செய்தார். மேலும், ஸ்மார்ட் விர்ச்சுவல் வேலி பற்றிய முக்கியத்துவத்துவம் குறித்து அப்பகுதியினரிடம் தெரிவித்தார். பின்னர், நெடுங்குன்று பழங்குடியினர் கிராமம் குடியி ருப்பிற்கு செல்ல சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறு களை ஆய்வு செய்தார். இதேபோல, நெடுங்குன்றில் வசிக் கும் பழங்குடியின மக்களை சந்தித்து பேசினார். அப்போது, மனித - விலங்கு மோதலை தவிர்க்க, இரவு நேரங்களில் வீடு களுக்கு குறுக்கு வழியில் செல்ல வேண்டாம் என்றும், வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் வலசை யானைகள் வருகை தொடங்கிவிட்ட காரணத்தினால் பொதுமக்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பாக இருக்கு மாறும், என கேட்டுக்கொண்டார்.