districts

img

மகளிர் தின விழா உற்சாக கொண்டாட்டம்

கோவை, மார்ச் 8- சர்வதேச மகளிர் தினத்தை முன் னிட்டு, செவ்வாயன்று பல்வேறு அமைப்பினர் எழுச்சி கொண்டாட்டத் தில் ஈடுபட்டனர். சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் கொண் டாடப்படுகிறது. இதன் தொடர்ச்சி யாக கோவை மாவட்டம், மலுமிச்சம் பட்டியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் எஸ்என்எம்வி கல்லூரி சார்பில், எஸ்என்எம்வி  கல்லூரியில் மகளிர் தின சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஏ. ராதிகா, மாநிலக்குழு உறுப்பினர் சுதா, கிழக்கு நகர தலைவர் வனஜா மற்றும் கல்லூரி முதல்வர் சுப்பிரமணி, மகளிர் நலன் துறை பேராசிரியர் சோபியா உட்பட ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர்.  இதேபோன்று கோவை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட மணியகாரன் பாளையம் மாநகராட்சி பள்ளியில்  சர் வதேச பெண்கள் தினம் கொண்டாடப் பட்டது. இதில் மாநகராட்சி மேயர் கல் பனா, மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால் சுன்கரா உள்ளிட்டோர் பங்கேற்று, மாநில மற்றும் தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் பங் கேற்று வெற்றி பெற்ற பள்ளி மாணவி களுக்கு பரிசுகளை வழங்கி கௌர வித்தனர்.  கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் உலக மகளிர் தினத்தை யொட்டி மரக்கன்றுகள் நடப்பட்டது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம், மாநகராட்சி ஆணையர்  ராஜகோபால் சுன்கரா ஆகியோர் துவக்கி வைத்தனர். கோவை அரசு கலைக்கல்லூரி மற் றும் சமூக நலத்துறை சார்பில் சர்வ தேச மகளிர் தினம், அக்கல்லூரியில்  கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில்  மாவட்ட சமூக நல அலுவலர் பி.தங்க மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். இதில், மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. கோவை ராஜவீதி, துணி வனிகர் பள்ளி யில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவி கள், “ஆணுக்கு நிகர் பெண்கள்” என் பதை வலியுறுத்தும் வகையில் வலிமை என்கிற வாசகத்தை அனை வரும் படிக்கும் வகையில் நின்றனர்.  இதேபோன்று, கோயம்புத்தூர் பத் திரிகையாளர் மன்றத்தில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில், பெண் ஊடகவியலாளர்கள் பலர் பங்கேற்றனர்.

நாமக்கல்

சிஐடியு நாமக்கல் மாவட்டக்குழு அலுவலகத்தில், அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம், சிஐடியு, உழைக் கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் மகளிர் தின கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.அலமேலு, சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலு சாமி, அங்கன்வாடி ஊழியர் சங்க  மாவட்ட தலைவர் கண்ணகி, உழைக் கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு வின் எல்.ஜெயக்கொடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம்

சேலம் மாநகர காவல் துறை சார் பில், சேலம் மாநகர காவல் ஆணையா ளர் அலுவலகம் மற்றும் மாநகர ஆயுதப் படை பிரிவு ஆகியவற்றில் உலக மக ளிர் தின கொண்டாட்டம் நடைபெற் றது. இந்நிகழ்ச்சிகளில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர்கள் என்.மோகன்ராஜ், எம்.மாடசாமி, எம். கும்மராஜா உட்பட ஏராளமான காவ லர்கள் கலந்து கொண்டனர்.

தருமபுரி

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் தோழி கூட்டமைப்பு சார்பில் சர்வதேச மகளிர் தின விழா தருமபுரி பூபதி திருமண மன்டபத்தில் நடைபெற்றது. இதில், மாதர் சங்க மாவட்ட தலைவர் ஏ.ஜெயா, செயலா ளர் எஸ்.கிரைஸாமேரி, துணைத் தலைவர் கே.பூபதி, துணைச் செயலா ளர் கே.சுசிலா, நகர தலைவர் ரங்க நாயகி, செயலாளர் நிர்மலாராணி, பொருளாளர் சுபா, தோழி கூட்ட மைப்பு தலைவர் எம்.சங்கர், நகரமன்ற துணைத்‌ தலைவர் நித்யா அன்பழ கன், நகராட்சி கவுன்சிலர்கள் கவிதா, விஜயலட்சுமி, செல்வி, சின்ன பாப்பா  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட சிஐடியு உழைக் கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங் கம் சார்பில் செவ்வாயன்று திருப்பூர் குமரன் நினைவகம் முன்பு மகளிர் தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப் புக்குழுவின் மாவட்ட அமைப்பாளர் எம்.பாக்கியம் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பெண் கள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப் பட்டன. மாதர் சங்க மாவட்ட செயலா ளர் எஸ்.பவித்ரா தேவி, சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ் ஆகியோர் மகளிர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர். இதில், சிஐடியு மாவட்ட தலைவர் கே.உன்னிகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் ஜீ.சம்பத், சாலையோர வியாபாரிகள் சங்க செயலாளர்  பி.பாலன், மாதர் சங்க மாவட்ட தலை வர் ஆர்.மைதிலி உட்பட சிஐடியு  மற்றும் மாதர் சங்கத்தைச் சேர்ந்த  பெண்கள் திரளானோர் கலந்து கொண் டனர். நிறைவாக, மாதர் சங்க மாவட்ட பொருளாளர் ஏ.ஷகிலா நன்றி கூறி னார்.