திருப்பூர், மார்ச் 22 - இந்திய ஒன்றிய அரசின் பிர தமரே வந்து கோவை தொகுதியில் போட்டியிட்டாலும் திமுக வேட்பா ளரிடம் தோல்வியை தழுவுவார் என மாநிலத் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார். திருப்பூர். பலவஞ்சிபாளையம் பகுதியில் உள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில். ஈரோடு மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த ஆலோசனைக் கூட்டத் தில், ஈரோடு மற்றும் பொள் ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக் குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்வது பற்றியும், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ள பிரச்சார பொதுக் கூட்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை மேற் கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து அமைச் சர் மு.பெ.சாமிநாதன் செய்தியா ளர்ளிடம் பேசுகையில், பொள் ளாச்சி, ஈரோடு மட்டுமல்லாது தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் பிரதமரை தேர்ந்தெடுக்கக்கூடிய சக்தியாக திகழ்வார்கள். மக்கள் விரும்பக் கூடிய, மக்களை மதிக்கக்கூடிய, ஒன்றிய அரசு மத்தியில் அமைய இருக்கிறது என்று தெரிவித்தார். மேலும், கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுவது குறித்த கேள் விக்கு, கோவை தொகுதியில் பிர தமர் நரேந்திர மோடியே போட்டி யிட்டாலும்கூட, அங்கும் திமுக வேட்பாளர் அதிக வாக்கு வித்தி யாசத்தில் வெற்றி பெறுவார், என்றார்.