ஒன்றிய அரசின் கையாலாக தனம் ஈரோடு எம்.பி., பிரகாஷ் குற்றச்சாட்டு
நாமக்கல், ஜன.5- ஒன்றிய அரசின் கையாலாக தனத்தால், வளர்ச்சி திட்டப்பணிகள் தேக்கமடைந்துள்ளதாக, ஈரோடு நாடா ளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் குற்றஞ்சாட்டி யுள்ளார். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள வெடியரசம்பாளையம் பகுதியில் புதிய பள்ளி கட்டிடம் மற்றும் ரேசன் கடை திறப்பு விழா ஞாயி றன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந் தன், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் மதுரா செந்தில் உட் பட பலர் கலந்து கொண்டனர். அப்போது, கே.இ.பிர காஷ் எம்.பி., செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேற் கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மனு ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாத தால், அனுப்பிய ஆவணங்கள் தேக்க நிலை கண்டுள் ளது. ஒன்றிய அரசின் கையாலாக தனத்தால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனங்கூர் ரயில்வே மேம்பா லம் குறித்த பணிகள் இந்த ஆண்டு முதலே துவங் கும். மணிப்பூர் போன்ற மாநிலங்கள் பாதுகாப்பு இல் லாத மாநிலமாக உள்ளது. குறிப்பாக, தென்னிந்தி யாவை தவிர்த்து வட இந்தியா முழுவதும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதற்கு காரணம் ஒன்றிய அரசு தான், என்றார்.
வெல்லம் மார்க்கெட்டில் ஆய்வு
ஈரோடு, ஜன.5- சித்தோடு அருகில் செயல்பட்டு வரும் வெல்லம் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையாளர் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியரின் உத் தரவின் பேரிலும், மாவட்ட நியமன அலுவலர் தங்க விக்னேஷ் அறிவுறுத்தலின் பேரிலும், சித்தோடு அருகே செயல்பட்டு வரும் வெல்லம் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அலுவலர் கேசவராஜ் தலைமையிலான குழு வினர் சனியன்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வெல்லம் மற்றும் சர்க்கரை இருப்பில் வைக்கப்பட்டி ருந்த குடோன்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதிலி ருந்து சந்தேகத்தின் அடிப்படையில் உணவு மாதிரி கள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்விற்கு அனுப்பப்பட் டது. மேலும், அங்கு நடைபெற்ற ஏலத்தில் பங்கு பெற்ற வியாபாரிகள் முன்னிலையில் வெல்லம் மற்றும் சர்க் கரையில் மேற்கொள்ளப்படும் கலப்படங்கள் குறித்தும், அதனால் பொது மக்களின் உடல் நலனுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில், பொங் கல் பண்டிகை நெருங்கி வருவதால், மாவட்டம் முழுவ தும் வெல்லம் மற்றும் சர்க்கரை உற்பத்தியில் கலப்ப டம் கண்டறியப்பட்டாலோ, உணவு பாதுகாப்பு உரிமம் பெறாமல் வணிகம் செய்வது கண்டறியப்பட்டாலோ உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 இன் கீழ் வழக்கு தொடரப்படும், என்றார்.
பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் விவசாய நிலங்களில் தேங்கிய கழிவுநீர்
கோவை, ஜன.5- அன்னூர் பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் கார ணமாக, சுமார் 60 ஏக்கர் விளை நிலங்களில் சாக்கடை கழிவுநீர் தேங்கியுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி யுள்ளனர். கோவை மாவட்டம், அன்னூரில் குடியிருப்புப் பகுதி களில் வெளியேறும் சாக்கடை கழிவுநீர், இட்டேரி சாலை யில் உள்ள மன்னீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் காலி நிலத்தில் பேரூராட்சி நிர்வா கத்தால் தேக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அரு கிலுள்ள விவசாய நிலங்களிலும் கழிவுநீரானது தேங்கி வருகிறது. இதனால், வேளாண் பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் வரத்து தொடர்ந்து அதி கரித்துள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட் டுள்ளது. முறையான திட்டமிடல் மற்றும் கழிவுநீர் கால் வாய்கள் ஆக்கிரமிப்பு காரணமாக, கடந்த சில ஆண்டுக ளாக விவசாய நிலங்களில் கழிவுநீர் தேங்குவது வாடிக் கையாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. கிணறு நிறைய தண்ணீர் இருந் தும், விவசாயம் செய்ய நிலம் இல்லாமல் கண்ணீர் வடிக் கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, விளை நிலங்களில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க மாற்று திட்டத்தை ஏற்ப டுத்த வேண்டுமெனவும், விளை நிலங்களில் தேங்கி யுள்ள கழிவுநீரை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அப்பகுதி விவசாயிகள் வலியு றுத்தியுள்ளனர்.
அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்பந்தயப் போட்டி
தருமபுரி, ஜன.5- அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு, நெடுந்தூர ஓட்டப்பந் தயம் ஞாயிறன்று நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி மாவட்டப்பிரிவு சார்பில், அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு நெடுந்தூர ஓட்டப்பந் தயம் ஞாயிறன்று நடைபெற்றது. தரும புரி அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளியிலிருந்து துவங்கிய போட்டியை, மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி கொடியசைத்து துவக்கி வைத் தார். 17 வயது முதல் 25 வயதிற்குட் பட்ட ஆண்கள், 25 வயதிற்குமேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக இப்போட்டி நடை பெற்றது. செந்தில் பப்ளிக் பள்ளியிலி ருந்து துவங்கி, தேசிய நெடுஞ்சாலை வழியாக தடங்கம் மேம்பாலம் சென்று திரும்பி மீண்டும் தோக்கம்பட்டி வழி யாக செந்தில் பப்ளிக் பள்ளியில் போட்டி நிறைவுபெற்றது. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிபெற்ற ஆண் மற்றும் பெண்க ளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன் றாம் பரிசாக ரூ.2 ஆயிரம், நான்கு முதல் 10 இடங்களைப் பெற்றவர்க ளுக்கு தலா ரூ.1000 மற்றும் தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந் நிகழ்ச்சியில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியை, மாவட்ட ஆட் சியர் ரா.பிருந்தாதேவி, சேலம் நாடா ளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகண பதி ஆகியோர் துவக்கி வைத்தனர். காந்தி விளையாட்டு மைதானம் முதல் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் வரை சென்று, மீண்டும் காந்தி மைதா னத்தில் போட்டி நிறைவுற்றது.
வாலிபரை தாக்கிய கரடியை பிடிக்க கூண்டு
உதகை, ஜன.5- எடக்காடு பகுதியில் வாலிபரை தாக்கிய கரடியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் காட்டுயானை, சிறுத்தை, புலி, காட்டுமாடு, கரடி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள் ளன. தீவன பற்றாக்குறை, வன விலங்குகள் எண்ணிக்கை யில் அதிகரிப்பு உட்பட பல்வேறு காரணங்களுக்காக கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வன விலங்குகள் வெளியேறி, ஊருக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் அவ் வப்போது மனித - வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது. நீல கிரி மாவட்டத்தில் மஞ்சூர், உதகை, குன்னூர் பகுதியில் கரடி, சிறுத்தை நடமாட்டமும், கூடலூர் பந்தலூர் பகுதியில் புலி, காட்டுயானைகள் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் மஞ்சூர் பஜார் பகுதியில் நடமாடி வந்த கரடி ஒன்று கடைகளை உடைத்து பொருட் களை சூறையாடி வருகிறது. மேலும், அப்பகுதியில் சிறுத்தை கள் சுற்றி திரியும் வீடியோவும் கடந்த சில நாட்களாக வைர லாகி வருகிறது. இந்நிலையில், மஞ்சூர் அடுத்த எடக்காடு, சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த சதீஷ்குமார் என்ற ரங்கசாமி (32) வெள்ளியன்று வேலை முடிந்து இயற்கை உபாதைக் காக தேயிலைத் தோட்டம் அருகில் உள்ள பகுதிக்கு சென்றுள் ளார். அப்போது வனவிலங்கு தாக்கி பரிதாபமாக உயிரி ழந்தார். அவரை தாக்கியது கரடியா? சிறுத்தையா? அல்லது புலியா? என்ற குழப்பம் ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின் பேரில் குந்தா வனச்சரகர் சீனிவாசன் தலைமையிலான வனத் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து வனவிலங்கை உட னடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும், இல்லா விட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று உறவினர்கள் ஆவே சமாக தெரிவித்தனர். இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் கரடி தாக்கி சதீஷ்குமார் இறந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கரடியைப் பிடிக்க அந்த பகுதியில் கூண்டு வைக் கப்பட்டுள்ளது. இதுகுறித்து குந்தா வனச்சரகர் சீனிவா சன் கூறுகையில், இறந்த சதீஷ்குமாரின் தலை மற்றும் பின் பகுதியில் கரடியின் பற்கள் தடம் பதிந்துள்ளது. எனவே சதீஷ் குமாரை தாக்கிய கரடியை பிடிக்க கூண்டு வைக்கப் பட்டுள்ளது. சதீஷ்குமாரின் குடும்பத்துக்கு அரசு நிதியாக ரூ.10 லட்சம் வழங்கப்படும். முதற்கட்டமாக உடல் அடக்க செலவாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது, என்றார்.
இருசக்கர வாகன விபத்தில் 3 பேர் பலி
அவிநாசி, ஜன.5- அவிநாசி அருகே நீலிபாளையத்தில் இருசக்கர வாக னங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகி னர். ஈரோடு மாவட்டம், நம்பியூர் தீத்தம்பாளையம் பகுதி யைச் சேர்ந்த சுரேஷ்குமார்(20), புளியம்பட்டியிலிருந்து அன் னூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டி ருந்தார். இதேபோல நம்பியூர் கடத்தூர் சாணார்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி(60), இவரது மனைவி கன்னி யாகுமாரி(43), மகள் சுப்புலட்சுமி(23). ஆகிய 3 பேரும் இரு சக்கர வாகனத்தில் அன்னூரில் இருந்து புளியம்பட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது சேவூர் நீலிபா ளையம் அருகே சென்ற போது, 2 இருசக்கர வாகனங்க ளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாது. இதில் பலத்த காயமடைந்த சுரேஷ்குமார், ரங்கசாமி ஆகியோர் சம்பவயி டத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலத்த காயமடைந்த கன்னியாகுமாரி, சுப்புலட்சுமி ஆகியோர் கோவை அரசு மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கன்னியா குமாரி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார். இது குறித்து சேவூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
பி.ஏ.பி. கூட்டு கண்காணிப்பு குழுவில் பாசன சபை தலைவர்கள்
திருப்பூர், ஜன.5 - பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத் தில் நீர் விநியோகத்தை மேற்பார்வையிடும் கூட்டு கண்காணிப்பு குழுவில், தேர்ந்தெடுக் கப்பட்ட பாசனசபை தலைவர்களை சேர்த்துக் கொள்ள திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் பரிந்துரைத்திருக்கிறார். பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத் தில் முறையற்ற வகையில் நீர்விநியோகம் நடைபெறுகிறது. இப்பிரச்சனைக்கு முடிவு கட்ட கண்காணிப்பு குழுக்கள் அமைத்து அவற்றில் பாசன சபைகளில் தேர்ந்தெடுக் கப்பட்ட தலைவர்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பல பகுதிகளில் விவசாய சங்க நிர்வாகிகள் கோரி வந்தனர். நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கடந்த டிசம்பர் மாதம் கூட்டு கண்காணிப்பு குழுவில், பாசன சபை தலைவர்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள பரிந்துரைத்தார். அவ ரது உத்தரவின் பேரில், பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் முறையற்ற வகையில் தண்ணீர் எடுப்பதை கட்டுப்படுத்த வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் கூட்டு கண்காணிப்புக்குழு அமைக்கப்பட் டது. இந்த கூட்டு கண்காணிப்பு குழுவில் அந்தந்த பகிர்மான குழுவின் எல்லைக்குட் பட்ட, கிராம நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர்களை சேர்த்துக் கொள்ள வும் பரிந்துரைத்தார். மேலும் பகிர்மானக் குழுவில் எல்லைக் குட்பட்ட வாய்க்காலை கண்காணிக்க வரு வாய்த் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள் ளது. ஆனால் பிஏபி திட்டத்தின் கீழ் வரும் தாரா புரம், உடுமலைபேட்டை, கோயமுத்தூர் தெற்கு, திருப்பூர் தெற்கு, பொள்ளாச்சி ஆகிய ஐந்து கூட்டு குழுக்களிலும் பாசன சபை தலைவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின் றனர். எனினும் முதற்கட்டமாக இந்த கூட்டு கண்காணிப்பு குழுவில், தேர்ந்தெடுக்கப் பட்ட பாசன சபை தலைவர்களை இடம்பெற செய்ததற்கு வரவேற்பு தெரிவித்துள்ள னர். படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புவதாகவும் அவர்கள் கூறினர்.
குப்பைகளை பயோ மைனிங் சிறு துகள்களாக நறுக்கும் பணி
குப்பைகளை பயோ மைனிங் சிறு துகள்களாக நறுக்கும் பணி திருப்பூர், ஜன.5- உடுமலை நகராட்சியில் சேகரிக்கப்பட்டும் குப்பைகளை பயோ மைனிங் முறையில் சிறு துகள்களாக நறுக்கும் பணி நடைபெற்று வருகிறது. உடுமலை நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கு வீடு வீடாக செல்லும் சுகாதாரப் பணியாளர்கள் மக்கும் குப்பை, மக் காத குப்பை என்று தரம் பிரித்து சேகரித்து வருகிறார்கள். மக்கும் குப்பைகள் உரமாகவும், மக்காத குப்பைகள் மாற்றுப் பயன்பாட்டுக்கும் அனுப்பப்படுகின்றன. முன்பு சிவசக்தி கால னியில் குப்பை கிடங்கு செயல்பட்டு வந்தது. தற்போது குப்பை கிடக்கு பொள்ளாச்சி சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால், பழைய கிடங்கில் உள்ள குப்பைகளை ‘பயோ மைனிங்’ முறையில் சிறு சிறு துகள்களாக நறுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சிபிஎம் தளி பேரூராட்சி துணைத் தலைவர் மீது சாதிய தாக்குதல் நடத்தியவர் சிறையில் அடைப்பு
திருப்பூர், ஜன.5- மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தளி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மீது சாதிவெறித் தாக்கு தல் நடத்திய அதிமுக பிரமுகர் சின்னு (எ) கருணாகரனுக்கு, திருப் பூர் மாவட்ட எஸ்.சி/எஸ்.டி. வன் கொடுமைத் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் சனியன்று ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். திருப்பூர் மாவட்டம் தளி பேரூ ராட்சி துணைத்தலைவராக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப் பூர் மாவட்டக்குழு உறுப்பினரும், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவருமான கோ.செல்வன் செயல்பட்டு வருகி றார். இவர் கடந்த டிச.18 ஆம் தேதியன்று, பேரூராட்சி அலுவல கத்தில், நடைபெறும் வேலைகள் குறித்து அலுவலர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்த சின்னு (எ) கருணாகரன், தளி பேரூராட்சியில் வேலைகளைச் செய்ய நீ யார் என்றும், மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த செல்வனின் சாதியைச் சொல்லி இழிவாகப் பேசி, அவர் மீது தாக்குதல் நடத்தி னார். இதையடுத்து செல்வன் மீது தாக்குதல் நடத்திய அதிமுக பிரமு கர் சின்னு (எ) கருணாகரன் மீது எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமை தடுப் புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத் தியது. இந்த கோரிக்கையை வலி யுறுத்தி டிச.22 ஆம் தேதியன்று ஞாயிறன்று தளி பேரூராட்சி அலு வலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்நிலையில், தளி காவல் நிலையத்தில் சின்ன (எ) கருணாகரன் மீது எஸ்.சி/ எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப் பட்டது. இந்த வழக்கில் கைது செய் யப்படும் நிலை இருந்ததால் சின்னு (எ) கருணாகரன் முன்ஜாமீன் பெறு வதற்கு சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகினார். அங்கு அவரது கோரிக்கையை விசாரித்த நீதிபதி, திருப்பூர் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தை அணுகுமாறு கூறினார். இதை யடுத்து சனிக்கிழமை திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் சின்னு (எ) கருணாகரன் முன் ஜாமீன் கோரி முறையீடு செய் தார். அப்போது தளி பேரூராட்சி துணைத்தலைவர் செல்வன் தரப் பில் வழக்கறிஞர் வை.ஆனந்தன் ஆஜராகி, சின்னுவுக்கு முன்ஜா மீன் வழங்க ஆட்சேபம் தெரிவித் தார். குறிப்பாக தளி பேரூராட்சி மன்ற அலுவலகத்திற்குள்ளேயே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிர திநிதியான செல்வன் மீது இவர் சாதியைச் சொல்லி இழிவாகப் பேசித் தாக்குதல் நடத்தியது, ஒடுக் கப்பட்ட மக்களை அச்சமூட்டக் கூடிய செயல். ஏற்கெனவே சின்னு மீது கடந்த காலத்தில் வழக்கு உள் ளது. இவருக்கு முன் ஜாமீன் வழங் குவது அப்பகுதி மக்களுக்கு அச் சத்தை ஏற்படுத்தும் என்று ஆட் சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி சின்னு (எ) கருணாகரனுக்கு ஜாமீன் மறுத்து ஜன.10 ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து அவரை உடனடியாக கைது செய்த காவல் துறையினர் சிறை யில் அடைத்தனர்.
கயாவிற்கு சிறப்பு ரயில் இயக்கம்
கயாவிற்கு சிறப்பு ரயில் இயக்கம் சேலம், ஜன.5- திருவனந்தபுரத்திலிருந்து பீகார் மாநிலம், கயா விற்கு கோவை, திருப்பூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் மகா கும்பமேளா நடைபெற உள்ளதை முன் னிட்டு, திருவனந்தபுரம் - கயா இடையே சிறப்பு வாராந் திர ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, ஜன.7, 21 மற்றும் பிப்.4 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் பிற்ப கல் 2 மணிக்கு திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் திருவனந்தபுரம் - கயா வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06021) வெள்ளிக்கிழமைகளில் நண்ப கல் 1.30 மணிக்கு கயா ரயில் நிலையத்தைச் சென்றடை யும். மறுமார்க்கத்தில் ஜன.10, 24 மற்றும் பிப்.7 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் கயா ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்படும் கயா - திருவனந்த புரம் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06022) திங்கள் கிழமைகளில் காலை 10.15 மணிக்கு திருவனந்தபுரம் ரயில் நிலையத்தைச் சென்றடையும். இந்த ரயில் கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண் ணூர், திருவல்லா, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக் கோணம், பெரம்பூர், கூடூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, வரங்கல், ஜபல்பூர், மானிக்பூர், மிர்சாபூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல் லும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டெருமை தாக்கி ஒருவர் படுகாயம்
காட்டெருமை தாக்கி ஒருவர் படுகாயம் உதகை, ஜன.5- உதகை அருகே காட்டெருமை தாக்கி ஒருவர் படு காயமடைந்தார். கோவை மாவட்டம், காரமடை பகுதியைச் சேர்ந்த வர் சக்தி (42). இவர் தன்னுடைய மகன் வினுவுடன் இரு சக்கர வாகனத்தில் வேலை சம்பந்தமாக உதகைக்கு சென்றுள்ளார். இந்நிலையில், ஞாயிறன்று வேலை முடிந்துவிட்டு, துனேரி அருகே சென்றபோது தேயிலை கொளுந்து பறிப்பதற்காக வாகனத்தை நிறுத்தி இறங்கி யுள்ளார். அப்போது, புதர் மறைவில் இருந்த காட் டெருமை அவரை தாக்கியது. இதில், படுகாயமடைந்த அவர் உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.
உரம் இருப்பை கண்காணிக்க குழு
உரம் இருப்பை கண்காணிக்க குழு உதகை, ஜன.5- நீலகிரி மாவட்டத்தில் உரம் இருப்பு மற்றும் தேவை குறித்து கண்காணிக்க வேளாண்மை உதவி இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து நீலகிரி வேளாண்மை இணை இயக்கு நர் (பொ) கிருஷ்ணவேணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாத முடிவில், யூரியா 970 மெட்ரிக் டன், டிஏபி 398 மெட்ரிக் டன், பொட்டாஷ் 786 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 340 மெட்ரிக் டன் மற்றும் காம்பிளக்ஸ் 660 மெட்ரிக் டன் என உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. உரம் இருப்பு மற்றும் தேவை குறித்து கண்காணிக்க வேளாண்மை உதவி இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு நீலகிரி மாவட்டத்திற்கு தேவை யான உரங்கள் இருப்பை தினந்தோறும் கண்காணிக் கும். இக்குழுவில் வேளாண்மை உதவி இயக்குநர் லாவண்யா ஜெயசுதா - 9487966179, வேளாண்மை அலுவ லர் அமிர்தலிங்கம் - 7464827909 ஆகியோர் உள்ள னர். நீலகிரி மாவட்ட உர விற்பனையாளர்கள், விவசாயி களை இணை பொருட்கள் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது. உரங்களை விற்பனை செய்யும் போது உர மூட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலையை விட அதிகம் வைத்து விற்பனை செய்யக்கூ டாது. விவசாயிகள் வாங்கும் பொருட்களுக்கு உரிய ரசீது கொடுக்க வேண்டும். விதிகளை மீறி விற் பனை செய்வது, உரம் (கட்டுப்பாட்டு) ஆணை 1985 ஐ மீறும் செயலாகும். இதை மீறி விற்பனை செய்யும் உர விற்பனையாளர்களின் உர உரிமம் ரத்து செய்யப் பட்டு அத்தியாவசிய பொருட்கள் சட்டம் (ஈசிஏ.,) 1955 பிாிவு-7 (1), (2) இன் படி உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும். விவசாயிகள் உரம் தொடர்பான புகார்களுக்கு மாநில அளவிலான 9363440360 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என தெரிவிக்கப் பட்டுள்ளது.
உபா-வின் கீழ் அண்ணாமலையை கைது செய்திடுக
கோவை, ஜன.5- பாஜக தலைவர் அண்ணாமலையை உபா சட்டத்தின் கீழ், கைது செய்ய வேண்டும், என வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது. சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஸ், கோவை மாநகர காவல் ஆணையரிடம் ஞாயிறன்று புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், பாஜக மாநிலத் அண் ணாமலை, கடந்த 19 ஆம் தேதியன்று, அல் உமா பாட்ஷாவின் இறுதிபேரணியை கண்டித்து, கருப்பு தினமாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, அண்ணாமலை பேசுகையில், பாஜகவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் தன்னை அழைத்து ‘அவர்களைக் கொன்றுவிட்டு, நான் ஜெயிலுக்கு போகிறேன். என்னை ஜாமீ னில் எடுங்கள்’ என என்னிடம் கூறியதாக, தெரிவித்தார். இது கட்சியின் புதிய விடியல் என்றும் அண்ணாமலை பேசியுள்ளார். பயங் கரவாத செயல்களுக்கு துணை போகும் அண்ணாமலை மீது, வன்முறையை தூண்டு தல், குற்றவாளியை பாதுகாத்தல், சமூகத் தில் அமைதியின்மையை உருவாக்குதல், ஆயுதம் ஏந்துவதற்கு மக்களை தூண்டு தல், உபா சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்ய வேண்டும், என தெரிவிக்கப் பட்டுள்ளது.
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சார்பில் புத்தகக் கண்காட்சி
கோவை, ஜன.5- நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சார் பில், பொதுவுடைமை இயக்கத்தின் நூற்றாண்டு துவக்க விழாவை முன் னிட்டு, கோவையில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பெரிய புத்தக நிறுவனமாக நியூ செஞ் சுரி புத்தக நிறுவனம் உள்ளது. பொது வுடைமை இயக்கத்தின் நூற்றாண்டு துவக்க விழாவை முன்னிட்டு, இந்நிறு வனம் சார்பில் ஆங்காங்கே புத்தகக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. இந் நிலையில், கோவை மாவட்டம், டவுன் ஹால் மாவட்ட நூலக கட்டிட வளாகம் மற்றும் நேரு ஸ்டேடியத்தில் இந்த புத் தகக் கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள் ளன. இவற்றில் பள்ளி கல்லூரி மாண வர்களுக்கு 10 முதல் 30 சதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. மற்றவர் களுக்கு 10 முதல் 25 சதம் தள்ளுபடி யும் வழங்கப்படுகிறது. இந்த கண்காட்சி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். வரும் ஜனவரி 31 ஆம் தேதி வரை கண்காட்சி நடத்த நிறுவ னம் திட்டமிட்டுள்ளது. கண்காட்சியில் மாணவர்களுக்கான தேர்வுக்கான நூல் கள், மருத்துவம், ஆய்வு நூல்கள், அறி வியல், சிறுவர் இலக்கியம், சுய முன் னேற்றம், அரசியல், சட்ட நூல்கள், பொது அறிவு, ஓவியம், வாழ்க்கை வர லாறு, வேளாண்மை, இலக்கியம் உள் ளிட்ட நூல்கள் 5000க்கும் மேற்பட்ட தலைப்புகளில் இடம்பெற்றுள்ளன. எனவே, இந்த கண்காட்சியை பயன்ப டுத்தி மாணவர்கள் தங்கள் வாசிப்புத் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண் டும் என்று நியூ செஞ்சுரி புத்தக நிறுவ னத்தின் மண்டல மேலாளர் குணசேக ரன் தெரிவித்துள்ளார்.
காயங்களுடன் சுற்றித்திரிந்த நபருக்கு உதவி
நாமக்கல், ஜன.5- பள்ளிபாளையம் பகுதியில் ரத்த காயங்களுடன் சாலை யில் சுற்றித்திரிந்த வடமாநிலத்தைச் சேர்ந்த நபருக்கு அங்கி ருந்தவர்கள் உதவி செய்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் - திருச்செங்கோடு சாலை, ஜீவா செட் பகுதியில் சுமார் 40 வயது நிரம்பிய வட மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் ஞாயிறன்று, உடலில் பல்வேறு இடங்களில் ரத்த காயங்களுடன் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். இத னைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவருடைய கைகளில் இருந்த கட்டுக்களை அவிழ்த்து விட்டு அவரிடம் விசாரித்த னர். அவர் இந்தியில் பேசியதால், புரிந்து கொள்ள முடியாத பொதுமக்கள் இதுகுறித்து பள்ளிபாளையம் காவல் துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மேற்கொண்ட விசாரணையில், அவர் மது போதையில் இருந்ததும், அவர் இரவு நேரத் தில் சிலரால் தாக்கப்பட்டு உடல் முழுவதும் காயங்கள் இருந்த தும் தெரிய வந்தது. இதையடுத்து ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த ஊழியர்கள் அவரை மருத்துவ சிகிச்சைக்கு வருமாறு அழைத்தனர். ஆனால், அவர் வர மறுத்து சாலையிலேயே அமர்ந்து கொண்டதால், வேறு வழியின்றி அங்கேயே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த னர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
மரவள்ளிக்கு உரிய விலை முத்தரப்பு கூட்டம்: ஆட்சியர் அறிவிப்பு
நாமக்கல், ஜன.5- மரவள்ளிக்கிழங்கிற்கு உரிய விலை நிர்ணயம் செய்தி டும் பொருட்டு முத்தரப்பு கூட்டம் நடைபெற உள்ளதென, நாமக்கல் ஆட்சியர் அறிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் சராசரியாக 1,800 ஹெக்டர் மர வள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. இதனிடையே, டிச.29 ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடை பெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மரவள் ளிக்கிழங்கிற்கு உரிய விலை நிர்ணயம் செய்திடும் பொருட்டு முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் செவ்வாயன்று (நாளை) காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில், மரவள்ளிக்கிழங்கிற்கு உரிய விலை நிர்ணயம் செய்து, விவ சாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு முத்த ரப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற உள் ளது. இக்கூட்டத்தில் நாடாளுன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பி னர்கள், சேகோ சர்வ் மேலாண்மை இயக்குநர், தோட்டக் கலை அலுவலர்கள், வேளாண் வணிக அலுவலர்கள் மற்றும் சேகோ ஆலை உரிமையாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே, இக்கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சங்க பிரதிநிதிகளும், மரவள்ளி பயிரிடும் விவ சாயிகளும் கலந்து கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சி யர் ச.உமா தெரிவித்துள்ளார்.
தொழில் வரி ரத்து: மார்க்சிஸ்ட் கட்சிக்கு நெசவாளர்கள் நன்றி!
தருமபுரி, ஜன.5- விசைத்தறிக் கூடங்களுக்கு அறிவிக்கப்பட்ட தொழில் வரி ரத்து செய்யப்பட்டுள்ளதை வரவேற்று, இதில் தலையிட்டு நடவடிக்கை எடுத்த மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தமிழக அரசிற்கு நெசவாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் அன்ன சாகரம், எட்டிமரத்துப்பட்டி, இலளி கம், எரங்காட்டுக்கொட்டாய், உங் கரானஅள்ளி, முக்கல்நாயக் கன்பட்டி, காந்தி நகர், மாட்லாம் பட்டி, ஓட்டப்பட்டி, பாரதிபுரம், ஐருகு, சோம்பட்டி, சாமிசெட்டிப் பட்டி, பாளையம்புதூர், கம்பைநல் லூர் காரிமங்கலம், பாலக்கோடு, புலிகரை, ஐயம்பட்டி, இண்டூர், கடகத்தூர், பொம்மிடி, ஓடசல் பட்டி, மொரப்பூர், ஜாலியூர், வடகம் பட்டி, பெரிய வடகம்பட்டி, தொப் பூர் வெல்லக்கல் உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் 1500 குடும் பத்தினர் பல தலைமுறைகளாக நெசவு தொழில் செய்து வரு கின்றனர். இவர்களுக்கு நெசவுத் தொழில் செய்ய மானிய விலையில் அரசு சார்பில் விசைத்தறிகள் வழங் கப்பட்டன. மேலும், தமிழக அரசா னது சிறு விசைத்தறியாளர்களுக்கு 1000 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கி வருகிறது. அரசு வழங்கும் மானியங்கள் காரணமாகவே விசைத்தறித் தொழில் நடைபெறு கிறது. இதனால் சுமார் 2000 நபர்க ளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கி றது. இந்நிலையில், தருமபுரி நக ராட்சி நிர்வாகமானது கைத் தொழிலாக செய்து வரும் விசைத் தறிகளுக்கு இண்டஸ்ட்ரியல் வரி (தொழில் வரி)யாக அடிக்கு 12 சதவிகிதம் விதிக்கப்படும் என்று அறிவித்தது. தமிழக அரசு இந்த வரிவிதிப்பினை கைவிட வேண்டும் விசைத்தறியாளர்கள் கோரிக்கை வைத்தனர். இதனிடையே மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தரும புரி மாவட்டத் தலைவர்கள் நெசவா ளர்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளையும், பிரச்சனை களையும் கேட்டறிந்தனர். இதைய டுத்து நகராட்சி நிர்வாகம் நெசவுத் தொழில் செய்பவர்களுக்கு வரி விதிப்பை கைவிட வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தருமபுரி மாவட்டக் குழு மாவட்ட நிர்வாகத்தையும், தமிழ்நாடு அரசையும் வலியுறுத் தியது. மேலும், விசைத்தறி உரிமை யாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனடிப்படையில் நகராட்சி நிர்வாக இயக்குநரகம் சார்பில் வெளியிட்டுள்ள சுற்றறிக் கையில், தமிழக அரசால் இலவச மின்சாரம் பெற்று, வீடுகளில் விசைத்தறிக் கூடங்களை நடத்தி வந்தால், அவற்றை தொழிற்சாலை வரி விதிப்புக்கு மாற்றம் செய்யா மல், தற்போது பயன்பாட்டில் உள்ள நடைமுறையே தொடரும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசைத்தறிக் கூடங்களுக்கு விதிக்கப்பட்ட தொழில் வரியை ரத்து செய்து, பழைய நிலையே தொடரும் என அறிவித்ததை வர வேற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தமிழக அரசுக்கும் விசைத்தறித் தொழிலாளர்கள் நன்றி தெரிவித்தனர்.